Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா?
இலவங்கப்பத்திரியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன
இலவங்கப்பத்திரி இலைகள் நமக்கு எளிதில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதனை நாம் பிரியாணி இலைகள் என்று கூறுகிறோம். இது பிரியாணி போன்ற உணவுகளுக்கு நறுமணம் ஊட்டும் முக்கிய மசாலா பொருளாக செயல்படுகிறது. இது ஒரு சிறந்த மசாலா பொருள் மட்டும் அல்ல. சிறந்த மருத்துவ பொருளும் கூட... இதன் மகத்தான நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பொடுகு மற்றும் முடிவளர்ச்சி :
பொடுகு மற்றும் முடிவளர்ச்சி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் சிறிதளவு இலவங்கப்பத்திரி இலைகளை நீரிலே இட்டு காய்ச்சி, ஆற வைத்து பின் தலையை அலச வேண்டியது அவசியமாகும். இதன் பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசி விடுவது அவசியம்.

தலை அரிப்பு :
தலையில் அரிப்பு உள்ளவர்கள், இந்த இலைகளை அரைத்து தலைக்கு மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அளவான சூடுள்ள நீரில் அலசி விட வேண்டும்.

சர்க்கரை நோய் :
தினமும் இரண்டு முறை இலவங்கப்பத்திரி இலைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஜீரண கோளாறு :
வயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. ஜீரண கோளாறுகளை சரி செய்து, சரியான முறையில் இயங்க வழி செய்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :
புற்றுநோயை உண்டாக்க கூடிய புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி வைக்க இந்த இலவங்கப்பத்திரி உதவியாக இருக்கிறது என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications