பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா?

இலவங்கப்பத்திரியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi

இலவங்கப்பத்திரி இலைகள் நமக்கு எளிதில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதனை நாம் பிரியாணி இலைகள் என்று கூறுகிறோம். இது பிரியாணி போன்ற உணவுகளுக்கு நறுமணம் ஊட்டும் முக்கிய மசாலா பொருளாக செயல்படுகிறது. இது ஒரு சிறந்த மசாலா பொருள் மட்டும் அல்ல. சிறந்த மருத்துவ பொருளும் கூட... இதன் மகத்தான நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகு மற்றும் முடிவளர்ச்சி :

பொடுகு மற்றும் முடிவளர்ச்சி :

பொடுகு மற்றும் முடிவளர்ச்சி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? அப்படி என்றால் சிறிதளவு இலவங்கப்பத்திரி இலைகளை நீரிலே இட்டு காய்ச்சி, ஆற வைத்து பின் தலையை அலச வேண்டியது அவசியமாகும். இதன் பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசி விடுவது அவசியம்.

தலை அரிப்பு :

தலை அரிப்பு :

தலையில் அரிப்பு உள்ளவர்கள், இந்த இலைகளை அரைத்து தலைக்கு மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அளவான சூடுள்ள நீரில் அலசி விட வேண்டும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

தினமும் இரண்டு முறை இலவங்கப்பத்திரி இலைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஜீரண கோளாறு :

ஜீரண கோளாறு :

வயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. ஜீரண கோளாறுகளை சரி செய்து, சரியான முறையில் இயங்க வழி செய்கிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :

புற்றுநோய் எதிர்ப்பு :

புற்றுநோயை உண்டாக்க கூடிய புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி வைக்க இந்த இலவங்கப்பத்திரி உதவியாக இருக்கிறது என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 9, 2017, 11:13 [IST]
Desktop Bottom Promotion