Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலை எழுந்ததும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் பெறும் 5 நன்மைகள்!
இங்கு காலை எழுந்ததும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் பெறும் ஐந்து நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
நம் அனைவருக்கும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் பழக்கம் தெரியும். ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை தினமும் செய்து வருகிறோம் என்பது தான் கேள்வி.
தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் மட்டும் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா யாரேனும் கூறினால் ஓரிரு முறை இதை செய்வோம். மற்றப்படி மறந்துவிடுடோம்.
உண்மையில் இது உடலுக்கு பல வகைகளில் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. அது என்னென்ன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்...
ஏன்? எதற்கு?
தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது என்பது ஒரு இயற்கை நிவாரணம். இது தொண்டை கரகரப்பு போன்றவைக்கு இயற்கை மருத்துவமாக திகழ்கிறது. பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை இது எளிதாக குணப்படுத்தும். மேலும், தினமும் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் என்னென்ன பயன்கள் என காணலாம் வாங்க...
தொண்டை!
தொண்டை கரகரப்பு மட்டுமின்றி, தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், இது வாயையும் சுத்தம் செய்ய பெருமளவில் உதவும். பிரஷ் செய்தவுடன், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க மறக்க வேண்டாம்.
பி.எச் அளவு!
வாயில் இருக்கும் இயற்கையான பி.எச் அளவை பாக்டீரியாக்கள் டிஸ்டர்ப் செய்யும். இதுவே, நீங்கள் தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் பாக்டீரியாக்களும் அழியும், நீங்கள் இயற்கையாக உடலில் பி.எச் அளவையும் சீராக வைத்துக் கொள்ள முடியும்.
மூக்கடைப்பு!
மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது, நாளுக்கு நான்கு முறை இப்படி தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் நல்ல நிவாரணம் அளிக்கும் என சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான ஈறுகள்!
மேலும், தினமும் காலையில் பல் துலக்கியதும், தண்ணியில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளின் ஆரோக்கியம் மேலோங்கும்.
இரத்த ஓட்டம்!
இதமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் சேர்த்து, இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது.
மேலும், வாய் கொப்பளிக்கும் நீரில் அதிக அளவு உப்பு சேர்க்க வேண்டாம். இதுவும் தவறான விளைவுகளை அளிக்க வாய்ப்புகள் உண்டு.