Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
மன அமைதி கிடைக்க இந்த யோகாவை எப்படி செய்யலாம்?
மன அமைதி வேண்டி புத்தர் போல் எல்லாராலும் விருப்பப்படி செல்ல முடியாது. நமக்கென வேலைகள் பல கண் முன் காத்துக் கிடக்கிறது. நீங்கள் இருக்குமிடத்திலே யோகாவினால்நீங்கள் இழந்த மன அமைதியை பெற முடியும்.
மன அழுத்தம் எல்லாருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஏற்படக் கூடியதே. பிரச்சனைகள் தீர்க்கப்படும்போது மன அழுத்தம் குறைந்து மனம் புத்துணர்வாகிவிடும்.
ஆனால் எப்போதும் மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்போதுஅது உடல் நிலையை பாதிக்கும். பிரச்சனைகள் தீர்க்க முடியாவிட்டாலும், அதற்காக தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருப்பது நல்லதல்ல.

மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள். அதற்கு நேரமில்லையென்றால் உங்கள் அழுத்தலிருந்து மீண்டு வர யோகாவை செய்து பாருங்கள். தீர்வு கிடைக்கும்.

உத்தன சிசோசனா:
நாய்குட்டியைப் போல் தோற்றம் கொண்ட நிலையில் செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இந்த பெயர் வந்தது. இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தந்து இறுக்கத்தை தளர்வாக்குகிறது.

செய்முறை :
முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். பின்னர்ஆழ்ந்து மூச்சை விட்டபிறகு தரையில் முட்டி போட்டு நில்லுங்கள். முட்டியை ஊன்றியபடி நேராக நிற்கவும். கைகளை தளர்த்தி ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

செய்முறை :
பின் மெதுவாக உடலை முன்னோக்கி வளையுங்கள். கைகளை தரையில் பதியுங்கள். அழுந்த தரையில் உள்ளங்கைகளை பதித்து முதுகை வளைக்கவும். இடுப்புப் பகுதி மேல் நோக்கியும் முதுகு வளைந்தபடி படத்தில் உள்ளது போல் செய்யவும்.

செய்முறை :
தலையையும் தரையில் பதியுங்கள். ஆழ்ந்து மூச்சை விடுங்கள். ஒரு நிமிடம் இந்த நிலையில் இருந்துவிட்டு பின் இயல்பான நிலைக்கு வரவும். பின்னர் மீண்டும் இது போல் சில முறை செய்யவும்.

பலன்கள் :
மன அமைதியை தரும். முதுகு, தோள்பட்டை வலியை குறைக்கும். உடல் வலியை போக்கும். தோள் மற்றும் முதுகிறகு நெகிழ்வுத்தன்மையை தரும்.

குறிப்பு :
மூட்டு மற்றும் காலில் அடிப்பட்டவர்கள் இந்த அசனத்தை தவிர்க்கவும்.



Click it and Unblock the Notifications