Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மன அமைதி கிடைக்க இந்த யோகாவை எப்படி செய்யலாம்?
மன அமைதி வேண்டி புத்தர் போல் எல்லாராலும் விருப்பப்படி செல்ல முடியாது. நமக்கென வேலைகள் பல கண் முன் காத்துக் கிடக்கிறது. நீங்கள் இருக்குமிடத்திலே யோகாவினால்நீங்கள் இழந்த மன அமைதியை பெற முடியும்.
மன அழுத்தம் எல்லாருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஏற்படக் கூடியதே. பிரச்சனைகள் தீர்க்கப்படும்போது மன அழுத்தம் குறைந்து மனம் புத்துணர்வாகிவிடும்.
ஆனால் எப்போதும் மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்போதுஅது உடல் நிலையை பாதிக்கும். பிரச்சனைகள் தீர்க்க முடியாவிட்டாலும், அதற்காக தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருப்பது நல்லதல்ல.
மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உங்களுக்கு பிடித்தமானதை செய்யுங்கள். அதற்கு நேரமில்லையென்றால் உங்கள் அழுத்தலிருந்து மீண்டு வர யோகாவை செய்து பாருங்கள். தீர்வு கிடைக்கும்.
உத்தன சிசோசனா:
நாய்குட்டியைப் போல் தோற்றம் கொண்ட நிலையில் செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இந்த பெயர் வந்தது. இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தந்து இறுக்கத்தை தளர்வாக்குகிறது.
செய்முறை :
முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். பின்னர்ஆழ்ந்து மூச்சை விட்டபிறகு தரையில் முட்டி போட்டு நில்லுங்கள். முட்டியை ஊன்றியபடி நேராக நிற்கவும். கைகளை தளர்த்தி ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.
செய்முறை :
பின் மெதுவாக உடலை முன்னோக்கி வளையுங்கள். கைகளை தரையில் பதியுங்கள். அழுந்த தரையில் உள்ளங்கைகளை பதித்து முதுகை வளைக்கவும். இடுப்புப் பகுதி மேல் நோக்கியும் முதுகு வளைந்தபடி படத்தில் உள்ளது போல் செய்யவும்.
செய்முறை :
தலையையும் தரையில் பதியுங்கள். ஆழ்ந்து மூச்சை விடுங்கள். ஒரு நிமிடம் இந்த நிலையில் இருந்துவிட்டு பின் இயல்பான நிலைக்கு வரவும். பின்னர் மீண்டும் இது போல் சில முறை செய்யவும்.
பலன்கள் :
மன அமைதியை தரும். முதுகு, தோள்பட்டை வலியை குறைக்கும். உடல் வலியை போக்கும். தோள் மற்றும் முதுகிறகு நெகிழ்வுத்தன்மையை தரும்.
குறிப்பு :
மூட்டு மற்றும் காலில் அடிப்பட்டவர்கள் இந்த அசனத்தை தவிர்க்கவும்.