Latest Updates
-
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்!
உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?
உட்காருமிடத்தில் நீர் கோத்த கட்டி எப்படி உருவாகிறது என்பது பற்றித் தான் இந்த கட்டுரையில் விளக்கப் போகிறோம். அதுபற்றிய தொகுப்பு தான் இது.
உடலின் பின்பக்கம் உட்காருமிடத்தில், புட்ட பிளவின் மேல்பகுதியில் தோலில் ஏற்படும் சிறு துளை அல்லது திறப்பு பிலோனிடல் புழையழற்சி (சைனஸ்) எனப்படுகிறது. இத்துளையில் சீழ் அல்லது திரவம் சேர்வது நீர்கோத்த கட்டி அல்லது கொப்புளம் உருவாகும்.

இந்த நீர் கோத்த கட்டியினுள் அழுக்கு, முடி, கழிவுகள் இருக்கும். இதன் காரணமாக அதிக வலி ஏற்படக்கூடும். சில நேரங்களில் இதில் தொற்று ஏற்பட்டு சீழ் அல்லது இரத்தம் வெளியேறக்கூடும். துர்நாற்றமும் வீசும். பொதுவாக ஆண்கள், வாலிபர்களுக்கு இந்தப் பாதிப்பு நேரக்கூடும்.

புழையழற்சி ஏன் ஏற்படுகிறது?
இப்பாதிப்பு நேருவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஹார்மோன் என்னும் இயக்குநீர் மாற்றங்கள், முடி வளருதல், ஆடை உராய்தல் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக இப்பிரச்னை வரக்கூடும் என கருதப்படுகிறது.
ஆடையினால் ஏற்படும் உராய்வு, அதிக நேரம் அமர்ந்திருத்தல் ஆகியவற்றால் பாதிப்பு நேரக்கூடிய இடத்தில் வளரும் முடிகளை, தோலின் உள்பக்கமாக வளரச் செய்கிறது. உடல், உள்பக்கமாக வளரும் முடிகளை அந்நிய பொருளாக கருதி, அதை தடுப்பதற்கு நோய் தடுப்பாற்றலை தூண்டுகிறது. நோய் தடுப்பாற்றல் வினை புரிந்து வளரும் முடியைச் சுற்றி நீருள்ள கட்டியை உருவாக்குகிறது.

அறிகுறிகள்
தோலின் மேற்பரப்பில் சிறிய குழிபோன்று காணப்படும். இந்தக் குழி, கட்டியாக மாறி, தொற்று ஏற்படும்போது வீக்கமும் நிற்கும்போதும் நடக்கும்போதும் வலியும் உருவாகும். சீழ், இரத்தம் ஆகியவையும் அவற்றோடு முடியும் சேர்ந்து வெளியேறக்கூடும்.

விளைவுகள்
அதிகப்படியான வலி, தோலில் வீக்கம் மற்றும் அழற்சி, பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுதல், 100.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உடல் வெப்பநிலை அதிகரித்தல் ஆகியவை புட்டத்தில் ஏற்படும் கட்டியினால் ஏற்படும் விளைவுகளாகும்.

சிகிச்சை முறைகள்
பிலோனிடல் சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், பாதிப்பின் அளவு, அது மீண்டும் வரக்கூடிய சாத்தியம் ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

ஆன்டிபயாடிக்ஸ் என்னும் எதிர் மருந்து
பாதிப்பு இருக்கிறது ஆனால் அதிக வலியோ, அழற்சியோ ஏற்படவில்லையெனில் பல்வேறு பாக்டீரியாக்களுக்கான சிகிச்சை முறையான எதிர்மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். சைனஸ் ஏற்படும் இடத்தை இது குணப்படுத்தாவிட்டாலும், தொற்று உருவாகாமல், உங்கள் சிரமத்தை சற்று தணிக்கும்.

ரண சிகிச்சை
மருத்துவர், பாதிக்கப்பட்ட பகுதி மட்டும் மரத்துப்போகும்படியான மருந்தினை செலுத்தி, அறுவை சிகிச்சைக்கான கத்தியை கொண்டு கட்டியை கீறி, உள்ளே இருக்கும் சீழ், இரத்தம் மற்றும் முடியினை அகற்றுவார். காயம் உள்ளிருந்து ஆறும்படி கட்டு போடுவார். இது குணமாக நான்கு வாரங்கள் ஆகும்.

ஊசி மூலம் மருந்து
இச்சிகிச்சைக்கும் மரத்துப் போவதற்கான மருந்து செலுத்தப்படும். பின்னர், கட்டி அழுகிவிடாமல் தடுப்பதற்கான மருந்தை ஊசி மூலம் செலுத்துவர். ஏற்பட்ட புண் காய்ந்து மூடும்வரைக்கும் பல முறை இச்சிகிச்சை வழங்கப்படும்.

அறுவை சிகிச்சை
ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் இருந்தால் அல்லது பாதிப்பு மறுபடியும் மறுபடியும் ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். பாதிக்கப்பட்ட இடம் மரத்துப்போவதற்கான மருந்து செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் சீழ், முடி மற்றும் சேர்ந்திருக்கும் கழிவுகள் அகற்றப்படும். பின்னர் காயம் ஆறுவதற்காக தையல் போடப்படும்.

தடுக்க முடியுமா?
பாதிப்பு நேரிடக்கூடிய புட்டத்தின் மேல் புறத்தை தினமும் மிருதுவான சோப்பு கொண்டு சுத்தம் செய்யவேண்டும். அந்த இடத்தில் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்வதோடு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்தால் பிலோனிடல் சைனஸ் ஏற்படாமல் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications