Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க உடலில் கொலஸ்ட்ரால் அபாய கட்டத்தை தாண்டிருச்சாம்!
High Cholesterol In Tamil: அதிக கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளி. ஏனெனில், இது உடலில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. கொலஸ்ட்ரால் ஆரம்பத்தில் உடலில் எந்த அறிகுறியையும் காட்டாது. அதேசமயம் அதிகரித்த கொலஸ்ட்ரால், சில நுட்பமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, கொலஸ்ட்ரால் அளவை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம். இதனால் அதன் அளவு அதிகரிப்பதை முன்கூட்டியே நீங்கள் சரிபார்க்கலாம். அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்படுத்தும் நுட்பமான அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கால்களில் கனம் செலுத்துங்கள்
கடுமையான வலியின் காரணமாக உங்கள் கால்கள் கனமாக இருப்பது கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க ஒரு சரியான அறிகுறி. இந்த வலி தொடைகள் மற்றும் முட்டி பகுதிகளில் காணப்படும். நடைபயிற்சியின் போது உங்களுக்கு வலி அதிகரிக்கலாம். முன்பு நீங்கள் நடந்த வழக்கமான தூரம் அல்லது குறைந்த தூரத்தைக்கூட உங்களால் நடக்க முடியவில்லை என்றால், உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அடிக்கடி பிடிப்புகள்
மூட்டுகளில், குறிப்பாக குதிகால் மற்றும் கால்விரல்களில் தொடர்ச்சியான பிடிப்புகள் ஏற்பட்டால், அது உடலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதை குறிக்கலாம். பொதுவாக அதிக கொழுப்பு உள்ளவர்களில் இந்த பிரச்சனை காணப்படுகின்றன. தமனிகள் சேதமடைவதாலும் இது நிகழ்கிறது.
இந்த பிடிப்புகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஏற்படுகின்றன. இதற்கான வீட்டு வைத்தியமாக, மக்கள் தங்கள் கால்களை படுக்கையில் அல்லது எந்த உயரமான இடத்திலிருந்தும் தொங்கவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர்ச்சியான பாதங்கள்
காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் போது உங்கள் பாதங்களில், குளிர்ச்சியை நீங்கள் அனுபவிக்கலாம். அது பொதுவானது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் உங்கள் பாதங்களில் அதிக குளிர்ச்சி இருந்தால், அதற்கு அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். குளிர்ந்த பாதங்களின் அறிகுறியை புறக்கணிக்காதீர்கள் மற்றும் கூடிய விரைவில் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
தோல் நிறத்தில் மாற்றம்
அடைபட்ட தமனிகள் காரணமாக, உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவு குறைந்த மூட்டுகளில் காணப்படலாம். குறைந்த இரத்தம் ஓட்டம் காரணமாக உங்கள் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படலம். மேலும், அது அதிக கொலஸ்ட்ரால் காரணமாகவும் இது ஏற்படுகிறது. தோலின் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் புறக்கணிக்காமல், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
காயம் ஆறுவதில் தாமதம்
உங்கள் கை, கால்களில் ஏற்பட்ட காயம் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதை நீங்கள் கவனித்தால், அது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை குறைக்கலாம். இது மோசமான இரத்த ஓட்டத்தின் அறிகுறியாகும். நீரிழிவு உள்ளிட்ட பிற காரணங்களாலும் காயம் ஆறுவதில் தாமதம் ஏற்படலாம். உங்களுக்கு நீண்ட நாள் காயம் ஆறாமல் இருந்தால், இரத்தப் பரிசோதனை செய்து, சரியான சுகாதார நிலையை கண்டறியுங்கள்.
இறுதிக் குறிப்பு
இந்த அறிகுறிகள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுட்பமானவையாக இருக்கின்றன. அதனால், இந்த அறிகுறிகளால் ஏற்படும் வலியின் தீவிரம் சிறியதாகக் கருதப்படுகிறது. எனவே இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்தை ஒருவர் உணரவில்லை.
இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவு அதன் இயல்பான அளவைத் தாண்டியதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். உடலில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவ உதவியை பெற வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
