Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க உடலில் கொலஸ்ட்ரால் அபாய கட்டத்தை தாண்டிருச்சாம்!
High Cholesterol In Tamil: அதிக கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளி. ஏனெனில், இது உடலில் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. கொலஸ்ட்ரால் ஆரம்பத்தில் உடலில் எந்த அறிகுறியையும் காட்டாது. அதேசமயம் அதிகரித்த கொலஸ்ட்ரால், சில நுட்பமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, கொலஸ்ட்ரால் அளவை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம். இதனால் அதன் அளவு அதிகரிப்பதை முன்கூட்டியே நீங்கள் சரிபார்க்கலாம். அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்படுத்தும் நுட்பமான அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கால்களில் கனம் செலுத்துங்கள்
கடுமையான வலியின் காரணமாக உங்கள் கால்கள் கனமாக இருப்பது கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க ஒரு சரியான அறிகுறி. இந்த வலி தொடைகள் மற்றும் முட்டி பகுதிகளில் காணப்படும். நடைபயிற்சியின் போது உங்களுக்கு வலி அதிகரிக்கலாம். முன்பு நீங்கள் நடந்த வழக்கமான தூரம் அல்லது குறைந்த தூரத்தைக்கூட உங்களால் நடக்க முடியவில்லை என்றால், உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அடிக்கடி பிடிப்புகள்
மூட்டுகளில், குறிப்பாக குதிகால் மற்றும் கால்விரல்களில் தொடர்ச்சியான பிடிப்புகள் ஏற்பட்டால், அது உடலில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளதை குறிக்கலாம். பொதுவாக அதிக கொழுப்பு உள்ளவர்களில் இந்த பிரச்சனை காணப்படுகின்றன. தமனிகள் சேதமடைவதாலும் இது நிகழ்கிறது.
இந்த பிடிப்புகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஏற்படுகின்றன. இதற்கான வீட்டு வைத்தியமாக, மக்கள் தங்கள் கால்களை படுக்கையில் அல்லது எந்த உயரமான இடத்திலிருந்தும் தொங்கவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர்ச்சியான பாதங்கள்
காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் போது உங்கள் பாதங்களில், குளிர்ச்சியை நீங்கள் அனுபவிக்கலாம். அது பொதுவானது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் உங்கள் பாதங்களில் அதிக குளிர்ச்சி இருந்தால், அதற்கு அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். குளிர்ந்த பாதங்களின் அறிகுறியை புறக்கணிக்காதீர்கள் மற்றும் கூடிய விரைவில் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
தோல் நிறத்தில் மாற்றம்
அடைபட்ட தமனிகள் காரணமாக, உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவு குறைந்த மூட்டுகளில் காணப்படலாம். குறைந்த இரத்தம் ஓட்டம் காரணமாக உங்கள் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படலம். மேலும், அது அதிக கொலஸ்ட்ரால் காரணமாகவும் இது ஏற்படுகிறது. தோலின் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் புறக்கணிக்காமல், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
காயம் ஆறுவதில் தாமதம்
உங்கள் கை, கால்களில் ஏற்பட்ட காயம் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதை நீங்கள் கவனித்தால், அது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை குறைக்கலாம். இது மோசமான இரத்த ஓட்டத்தின் அறிகுறியாகும். நீரிழிவு உள்ளிட்ட பிற காரணங்களாலும் காயம் ஆறுவதில் தாமதம் ஏற்படலாம். உங்களுக்கு நீண்ட நாள் காயம் ஆறாமல் இருந்தால், இரத்தப் பரிசோதனை செய்து, சரியான சுகாதார நிலையை கண்டறியுங்கள்.
இறுதிக் குறிப்பு
இந்த அறிகுறிகள் கவனிக்கப்பட முடியாத அளவுக்கு நுட்பமானவையாக இருக்கின்றன. அதனால், இந்த அறிகுறிகளால் ஏற்படும் வலியின் தீவிரம் சிறியதாகக் கருதப்படுகிறது. எனவே இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்தை ஒருவர் உணரவில்லை.
இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவு அதன் இயல்பான அளவைத் தாண்டியதற்கான ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். உடலில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவ உதவியை பெற வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
