Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
காதலர் தினம் ரோஜா புற்றுநோயோடு போராடி உயிர் பிழைத்த கதையை அவரே சொல்றார் கேளுங்க...
நடிகை சோனாலி பிந்த்ரே உயிரைக் கொல்லும் புற்றுநோயில் இருந்து எப்படி போராடி உயிர் பிழைத்தார் என்பது பற்றி தான் நாம் இங்கே பார்க்கவிருக்கிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இது.
காதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. கடந்த வருடம் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. சோனாலி பிந்த்ரே அவருடைய மருத்துவ நிலை பற்றி தன்னுடைய விசிறிகளுக்கு தெரிவிக்க விரும்பினார்.

"இந்த நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறினார். இவருக்கு மேட்டாஸ்டடிக் கான்சர் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அமெரிக்க சிகிச்சை
நாடு முழுவதும் உள்ள புற்று நோயாளிகளுக்கு இவர் ஒரு உத்வேகமாக இருந்தார். சமூக ஊடகங்களில் இவருடைய நிலையைப் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியிட்டபடி இருந்தார். புற்று நோயை எதிர்த்து இவர் நடத்திய போராட்டத்தை மிக எளிமையாக மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். இவருடைய வாழ்க்கை பலபேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது . இதானல் இவருடைய ரசிகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு எழுந்தது.

நேர்காணல்
ஹார்பர் பஜாருடன் இவருடைய சமீபத்திய நேர்காணலில், இவருடைய வாழ்க்கையைப் பற்றியும் புற்று நோயுடன் போராடியதைப் பற்றியும் முழுவதும் விவரித்தார். புற்று நோய் இருப்பது தெரிய வந்தவுடன் இவருடைய குடும்பத்தாரும், இவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இவருடைய அடிவயிறு முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைப் பற்றி இவர் மேலும் விவரித்தார். இந்த பாதிப்பால் சோனாலி முழுவும் உடைந்து போனார்.

நொறுங்கிய இதயம்
"பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்ற ஸ்கேன் மூலம் இவருடைய அடிவயிற்றில் புற்றுநோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. தேவைதையின் ஒளி எல்லா இடங்களிலும் பரவுவது போல் புற்று நோய் அடிவயிறு முழுவதும் பரவி இருந்தது. இதனைப் போக்குவதற்கான முயற்சியில் 30% மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக நியுயார்க் மருத்துவர்கள் தெரிவித்தபோது நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதயம் உடைந்து தூள் தூளானது" என்று சோனாலி கூறினார்.

என்ன நினைத்தார்?
புற்று நோய்க் கிருமியின் அதி தீவிர பரவலைப் பற்றி மருத்துவர்கள் தெரிவித்த போது, சோனாலி, உடைந்து போனார் என்றாலும், அவருடைய நம்பிக்கையை இழக்க வில்லை. "நோய்வாய்பட்டு நான் இறப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை" என்று சோனாலி கூறினார்.

எப்படி மீண்டார்?
"ஆனால் இறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த நோயால் நான் இறந்து விடுவேன் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
இந்த சிகிச்சை முழுவதும் சோனாலியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பக்க பலமாய் இருந்து அவரை ஊக்குவித்து வந்தனர்.
"தற்போது நான் என் உடலின் அசைவுகளை கூர்மையாக கவனிக்கத் தொடங்கியுள்ளேன். இது ஒரு புதிய வழக்கம் மற்றும் புதிய பயணம்." புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பெண்களுக்கு நான் கூற விரும்புவது, "நோயில் இருந்து முற்றிலும் மீண்டு வர தேவையானது, போதிய பராமரிப்பு மற்றும் ஆதரவு. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து அவர்களின் முழு அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ளும் நேரம் இது" என்று அவர் கூறி முடித்தார்.



Click it and Unblock the Notifications











