Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
உங்க கண் எதாவது இப்படி இருக்கா?... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?
கண்இமை கீழே இறங்கியிருப்பது சிலருக்கு தற்காலிக பிரச்சினையாகவும் சிலருக்கு நிரந்தரமாகவும் இருக்கும். அதுபற்றி விரிவாக இங்கே பார்ப்போம்.
இமை இறக்கம் அல்லதி இமைத் தொய்வு என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். பிறக்கும்போதே ஒருவருக்கு இத்தகைய இமைத் தொய்வு இருக்குமானால் இதனை பிறவி இமைத் தொய்வு என்று கூறுவர். வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் இந்த பாதிப்பு ஒருவருக்கு உண்டாகலாம்.

மேல் கண் இமைகள் சற்று தொய்வடைந்து அல்லது கண்மணியை மறைக்கும்போது அதனை இமைத் தொய்வு என்று கூறலாம். ஒரு தரப்பு இமைத் தொய்வு ஒரு கண்ணை மட்டும் பாதிக்கிறது, மாறாக, இருதரப்பு இமைத் தொய்வு இரண்டு கண்களையும் பாதிக்கிறது. இது தற்காலிக பாதிப்பாகவும் இருக்கலாம், நிரந்தர பாதிப்பாகவும் இருக்கலாம்.

கண்ணிமை தொய்வு
பிறக்கும்போது இமைத் தொய்வு ஏற்படுவதற்கு பிறவி இமைத் தொய்வு என்று கூறலாம். இதன் தீவிர தன்மையைக் பொறுத்து, பார்வையில் குறைபாடு அல்லது தடை உண்டாக நேரலாம். கண்மணியை இது தடை செய்யும் தன்மையைப் பொறுத்து பார்வை கோளாறு கணக்கிடப்படும். பெரும்பாலான வழக்குகளில் இந்த நிலைமை இயற்கையான முறையில் அல்லது மருந்துகளின் உதவியால் சரி செய்யப்படும்.
இமைத் தொய்விற்கான காரணம், அறிகுறி மற்றும் சிகிச்சை பற்றி இப்போது பார்க்கலாம்.

காரணங்கள்
இமைத் தொய்விற்கான சில காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1. வயது அல்லது அதிர்ச்சியின் காரணமாக ஏற்படலாம்
2. ஊட்டச்சத்து இல்லாமை
3. வயது
4. கண்புரை அறுவை சிகிச்சைக்கு பிறகு
5. கண் இமையை தாங்கி பிடிக்கும் தசைகளில் பலவீனம்
6. தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் சேதம்
7. மேல் கண் இமைகளில் இருக்கும் சதை தொங்குதல்
8. மது மற்றும் புகை பழக்கம் அதிகமாக இருப்பது
9. சூரிய ஒளியின் பாதிப்பு

அறிகுறிகள்
1. கண்கள் வறண்டு காணப்படுவது அல்லது நீர் நிறைந்து காணப்படுவது,
2. உங்கள் முகம் சோர்வாக காணப்படுவது
3. ஒரு கண் இமை அல்லது இரண்டு கண் இமைகளும் தொய்வடைந்து காணப்படுவது
4. உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முக்கியமாக பாதிக்கப்படும். அந்த இடங்களில் ஒரு வித வலியை நீங்கள் உணரலாம்.

எளிய சிகிச்சை முறைகள்
1. செவ்வந்தி டீ பருகுவதால் வீக்கம் குறையலாம். அல்லது செவ்வந்தி டீ பேக்கை கண்களைச் சுற்றி வைத்துக் கொள்ளலாம்.
2. நரம்பு அல்லது தசை சம்மந்தமான பாதிப்பு என்றால் அக்குபஞ்சர் நல்ல தீர்வைத் தரலாம்.
3. வைடமின் பி 12 அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
4. நேத்ராபன சிகிச்சை என்னும் ஆயுர்வேத சிகிச்சைப் படி, வெதுவெதுப்பான நெய், உப்பு மற்றும் எண்ணெய்யை கண்களில் ஊற்றலாம். இதனால் தசைகள் மற்றும் நரம்புகள் வலிமையடையும்.
5. இமைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளை செய்யலாம்.
6. பீட்டா கரோடின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
7. லூடின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
8. கண்கள் அதிகம் சிரமப்படுவதை தவிர்க்கலாம்.

பாதிப்புகள்
1. ஒற்றைத்தலைவலி
2. கை, கால் மற்றும் முகத்தில் உள்ள தசைகள் பலவீனமடைதல்
3. இரட்டை பார்வை
4. விழுங்குவதில் சிரமம்
5. கண் தொற்று
6. கண் வீக்கம்
7. கண் வலி



Click it and Unblock the Notifications