Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் மூளை பலம் பெற நீங்கள் செய்ய வேண்டிய யோகாசனங்கள் எவை என தெரியுமா?
யோகாவினால் எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கிறது. அதில் ஒன்றுதான் மூளைக்கு தேவையான எனர்ஜியையும், பலத்தையும். தருவது. என்ன மாதிரியான ஆசனங்கள் மூளையை பலப்படுத்தும் என பார்க்கலாம்.
உடலில் ஒட்டு மொத்த செயல்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைமை செயலகம்தான் நமது மூளை. மூளையின் வேலைகள் சொல்லி மாளாது. சற்று சிக்கலான வடிவமைப்பை கொண்டது.

நரம்பு மண்டலம், ஹார்மோன் அதோடு அதன் ஒவ்வொரு மடிப்பிலும் பல விதமான நுண்ணிய செயல்களை கொண்டது. அத்தகைய மூளைமிகவும் சென்ஸிடிவ்.
அதனை பலப்படுத்தினால் உங்கள் உடல் இன்னும் சுறுசுறுப்பாகவும், பலமாகவும், அறிவு கூர்மையுடனும் விளங்கும். அதற்கு தேவையான முக்கிய விஷயங்களின் ஒன்றுதான் யோகாசனம். உங்கள் மூளையைப் பலப்படுத்தும் முக்கிய ஆசனங்கள் பற்றி இங்கு காண்போம்.

உத்தனாசனம் :
இந்த ஆசனத்தை செய்யப்படும்போது மூளைப்பகுதிக்கு அதிக ரத்தம் பாய்கிறது. இதனால் மூளையில் உண்டாகும் பாதிப்புகள் நிவாரணம் செய்கிறது. மூளைக்கு தங்கு தடையில்லாமல் ரத்த கிடைக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

விருக்ஷாசனம் :
இந்த ஆசனத்தை செய்யும் போது மனதை ஒருமுகப்படுத்தப்படுகிறது. நரம்பு மண்டலம் கட்டுப்படுத்தப்படுவதால் மூளை அமைதி கொள்கிறது. மூளைக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.

திரிகோணாசனம் :
திரிகோணாசனா என்னும் ஆசனம் தண்டுவடத்தை பலப்படுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். அதோடு மூளைக்கும் சக்தியை தரும் ஆசனம் இந்த ஆசனம்.

அதோ முக்த ஷவனாசனம் :
நாய் போன்ற தோற்றத்தில் செய்யப்படும் இந்த ஆசனத்தினால் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறுகிறது. மூளையும் வலுப்படும் . இந்த ஆசனத்தை தினமும் செய்து பாருங்கள்.

ஹாலாசனா :
இந்த ஆசானம் செய்வது எளிதுதான் இது மூளைக்கு மட்டுமல்ல, வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகளுக்கும் பலம் தருவதால் இந்த ஆசனம் மிகவும் நல்லது.

வஜ்ராசனா :
மூளை பலம் பெற இந்த ஆசனம் மிகவும் பயன் தரக் கூடியது. முட்டி போட்டு செய்யபப்டும் இந்த ஆசனத்தால் மூளையின் செல்கள் தூண்டப்படுகின்றன.



Click it and Unblock the Notifications