Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
டெல்லியில் வேகமாக பரவி வரும் ஸ்வைன் ஃப்ளூவை தடுப்பதற்கான 5 வழிகள் பற்றி தெரியுமா?
இந்த மழைக்காலத்தில் டெங்கு, சிக்கன் குனியா மட்டுமல்லாமல் ஸ்வைன் ஃப்ளூவும் வேகமாக பரவி வருகிறது.
நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் 2017 ல் இந்த நாள் வரைக்கும் ஏறத்தாழ 300 பேர்கள் ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கவலைக்கிடும் நிலைமை என்னவென்றால் இந்த வருடத்திலயே 2 பேர்கள் இந்த ஸ்வைன் ஃப்ளூவால் இறந்துள்ளனர் என்பது தான்.
இது தலைநகரம் டெல்லியில் மட்டும் உள்ள நிலவரம். ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்து கொண்டால் நிறைய இடங்களிலும் ஸ்வைன் ஃப்ளூ வேகமாக பரவி வருகிறது. ஜனவரி 2017 லிருந்து ஜீலை முதல் வாரம் வரை உள்ள தகவல்படி 12,640 பேர்கள் இந்தியா முழுவதும் ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 600 பேர்கள் பரிதாபமாக உயிழந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி குஜராத்தில் பாதிக்கப்பட்ட 289 பேர்களில் 75 பேர்கள் இறந்துள்ளனர். கேரளாவில் 1127 பேர்களில் 63 பேர்கள் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் பாதிக்கப்பட்ட 407 பேர்களில் 59 பேர்கள் இறந்துள்ளனர். கர்நாடகாவை பொருத்த வரை 2377 பேர்களில் 15 பேர்கள் இறந்துள்ளனர்.
எனவே இந்த மாதிரி சமயத்தில் நோயை வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே ஸ்வைன் ஃப்ளூ வருவதை தடுப்பதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம் .
கைகளை சுத்தமாக கழுவுதல் :
முதல் படியாக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதுவும் குறிப்பாக மக்கள் நெருக்கடி இடங்களுக்கு சென்று விட்டு வந்தாலோ, பஸ்ஸில், ரயிலில் பயணம் மேற்கொண்டாலோ நன்றாக கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மூக்கு மற்றும் வாய் பகுதிக்கு மாஸ்க் போட வேண்டும் .
கண்டிப்பாக வெளியில் செல்லும் போது மூக்கு வரைக்கும் மாஸ்க் போட்டு செல்லவும். இது மற்றவர்களின் இருமல், தும்மல் மூலமாக நமக்கு நோய் பரவுவதை தடுக்கும்.
கைகளால் மூக்கு, கண்கள் மற்றும் வாய் பகுதியை தொட வேண்டாம் .
நிறைய நேரம் கைகளால் மூக்கு, கண்கள் மற்றும் வாய் பகுதியை தொட வேண்டாம். ஏனெனில் இந்த பகுதிகளில் தான் தொற்றுக்கள் வேகமாக பரவ ஆரம்பிக்கும்.
மாஸ்க் பயன் :
இதற்காகத்தான் வெளியே கூட்ட நெரிசல் உள்ள இடங்கள், தெருக்கள் வழியாக செல்லும் போது மாஸ்க் போட்டு சென்றால் தூசி மற்றும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
அதிகமாக தண்ணீர் அருந்துங்கள் . இந்த மாதிரி நேரங்களில் நிறைய தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். இது நோய் கிருமிகள் உங்களை அணுகாமல் போராட உதவி தொற்றுக்களிடமிருந்தும் உங்களை காக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













