Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
மருதாணிப் பூக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்யும்? -அதன் மருத்துவ நன்மைகள்!!
மருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகை, சருமம் மற்றும் கூந்தல் அழகிற்காக உபயோகப்பட்டாலும் இது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. அதன் குணங்கலையும், நோய்களுக்கு உபயோகிக்கும் முறையும் இங்கு காண்போம்.
மருதாணியை பிடிக்காதவர்கள் குறைவு. என்னதான் மெஹந்தி கோனில் அலங்காரம் செய்தாலும் மருதாணி இலையை அரைத்து கைகளில் இடுவதை விட அழகு அதில் கிடையாது.
கைகளில் பல நாட்கள் மருதாணியின் வாசம் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியும் தரும்.

வெறும் அழகை மட்டும் மருதாணி தர வில்லை. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என தெரியுமா? மருதாணியின் பூக்களும் பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதனை எப்படி நோய்களுக்கு உபயோகப்படுத்துவது? தொடர்ந்து படியுங்கள்

தலைவலிக்கு, கூந்தல் வளர :
சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும். கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும்.

தூக்கம் வர :
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

கைகால் வலிக்கு :
மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.

வாத வலிக்கு:
கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.

சரும வியாதிகளுக்கு
காலில் தோன்றக்கூடிய தேமல் மற்றும் கரப்பான் புண்களுக்கு மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும்.எக்ஸிமா என்னும் சரும நோய்க்கும் மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

பாத வெடிப்பு மற்றும் சொத்தை நகத்திற்கு :
பாத வெடிப்பு இருப்பவர்கள் மருதாணி அரைத்து பற்று போடவும். சொத்தையான நகங்கள் இருந்தால் அவற்றிற்கு மருதாணி அரைத்து இட்டால், நகங்களில் சொத்தை மறைந்து ஆரோக்கியம் மேம்படும்.



Click it and Unblock the Notifications