Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்?
குரல் வளம் இனிமையாக இருந்தால் எல்லாருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் அதனை எப்படி மெருகூட்டுவது என் அதடுமாற்றம் இருந்தால் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவுமா என பாருங்கள்.
குரல் இனிமையாக இருக்கவேண்டுமென எல்லாருக்குமே ஆசை. ஆனால் கரகரப்புடன் ஸ்ருதி விலகி, குரலே சுமார் ரகத்தில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதனை மெருகூட்ட முடியும். .
மிகவும் சுமாரான குரல் உடையவர்கள் வசீகரமான குரலை பெறுவதற்கு சில வைத்திய முறைகள்தான் காரணம். அதோடு சில முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உரக்க பேசுவது தொண்டையின் குரல் அளவை பாதிக்கும். கட்டை மாறிவிடும். ஆகவே நன்றாக பாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கத்தி பேசுதலை தவிர்க்க வேண்டும். (பாடுபவர்களின் பேச்சை கேட்டுப்பாருங்கள். ஸ்ப்தமே அதிகம் வராது. )
உங்களுக்கு நல்ல குரல் வளம். ஆனால் தொண்டையில் பிசறல் அதிகம் இருந்தாலும் ராகம், ஸ்வரம் கை கூடாது. இப்படி நல்ல குரல் வளம் பெறவும். பிசிறில்லாத குரல் பெறவும் கீழே உள்ள குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்கள் கை கொடுக்கும்.

பேரிச்சம் பழம் :
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் குரலில் இருக்கும் கரகரப்பு போய் இனிமையான குரல் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் :
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் வெண்ணெயில் வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் இனிமையான குரலாக மாறும்

மாவிலை :
முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.

சுக்கு மிளகு திப்பிலி :
அதிமதுரம், பனங்கற்கண்டு, திப்பிலி சம அளவு இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் இனிமையான குரல் கிடைக்கும். அதுபோல் வல்லாரைக் கீரையை தினசரி சாப்பிட்டு வர இனிமையான குரல் கிடைக்கும்.

தேன் :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் மலைத்தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் , தொண்டையில் இருக்கும் கரகரப்பு நீங்கி , தடங்கலில்லா இனிமையான குரலை மாறுவது நிஜம்.



Click it and Unblock the Notifications











