Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
டெட்டனஸ் ஊசி போட்டால் உண்டாகும் பின்விளைவுகளைப் பற்றி தெரியுமா?
டெட்டனஸ் என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய். க்ளாஸ்ட்ரீடியம் டெட்டனி என்கின்ற பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய். இந்த பேக்டீரியா மிக அசுத்த நிலையில் உருவாகும். விலங்குகளின் மலத்தில், துருபிடித்த இரும்புகளில், என எல்லாவித இடத்திலும் உருவாகும்.

இது ஏன் கொடியது?
இந்த கிளாஸ்ட்ரீடியம் டெட்டனி பேக்டீரியா மிகக் குறைந்த காற்றில்தான் உயிர்வாழும். அதனால்தான் அவை உடலுக்குள் தோலின் மூலமாக ஊடுருவி அங்கே வாழ்கின்றது.
உடலுக்குள் இந்த பேக்டீரியா சென்றதும். அங்கே டெட்டனோஸ்பாஸம் என்ற நச்சை வெளியிடுகிறது. இது நேரடியாக நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது. இறுதியில் உயிருக்கே உலை வைக்கிறது.
பொதுவாக இந்த பாக்டீரியாக்கள், தோலில் உண்டாகும் காயங்கள் வெட்டுக்கள் மூலமாக உள்ளே செல்லும். சிலவகை பேக்டீரியாக்கள் தலையில் அடிபட்டாலோ, அல்லது காதுகளின் மூலமாகவோ பரவும் நியோனேடல் டெட்டனஸ் என்ற தொற்று நோயில் குழந்தைகளுக்கு எளிதில் இந்த பேக்டீரியாக்கள் பரவும்.
டெட்டனஸ் ஊசி :
இதற்காகத்தான் பிறந்ததிலிருந்தே ஐந்து வயது வரை குழந்தைகளுக்கும், ஏதாவது அடிபட்டால் பெரியவர்களுக்கும் டெட்டனஸ் ஊசி போடப்படுகிறது.
இந்த ஊசியிலுள்ள மருந்து ரத்தத்தில் கலந்து, அதிக அளவு நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்து, டெட்டனஸ் பாக்டீரியாக்களை உள்ளே வரவிடாமல் காக்கிறது.
டெட்டனஸ் ஊசியின் பக்கவிளைவுகள் :
டெட்டனஸ் ஊசி போடுவதால், ஒரு பக்கம் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதால், ஆபத்தில்லை. இருப்பினும் இந்த ஊசியினால் சில பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது.
சாதரண பக்கவிளைவுகள்:
சோர்வு, காய்ச்சல், மூட்டு வலி, குமட்டல், தசை வலி, ஆகியவை உண்டாகும்.
சில அரிதான பக்க விளைவுகள் :
நரம்பு தளர்ச்சி, நடுக்கம், வாய் குழறுதல், வீக்கம், அலர்ஜி போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும். ஆனால் அவை அரிதானவை. சிலருக்கு மூச்சு விடுவதற்கும் சிரமமாக இருக்கும்.
ஆனால் இந்த ஊசி எல்லாருக்கும் பக்கவிளைவுகளைத் தரும் என்று சொல்லமுடியாது. இதற்காக ஊசி போடாமல் இருப்பது ஆபத்து. ஆகவே எந்த ஆழமான காயம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக டெட்டனஸ் ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















