Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
தாளாத முதுகுவலியா? வீட்டிலேயே இருக்கக் கூடிய இந்த 5 ஆயுர்வேத பொருட்களை யூஸ் பண்ணுங்க !!
முதுகு வலியா? தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனைகளை தந்துவிடும். கீழ்கண்ட சிகிச்சைகளை முயற்சித்துப் பாருங்கள்.
முதுகு வலி அசாதரணமானது. அதனை அனுபவிப்பர்களுக்குதான் அதன் வீரியம் புரியும். எங்கேயும் செல்ல முடியாமல் முடங்க வேண்டிய நிலைமையும் கூட வரும்.
அதிகப்ப்படியான உடல் பருமனால் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு முதுகுவலி உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு. பிரசவத்திற்கு பின் அதிக பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வாறு முதுவலி வருகிறது?
முதுகிலிருந்து முழங்கால் வரை இரு பெரிய நரம்புகள் செல்கின்றன. அவை அங்கிருந்து பாதம் வரை பல கிளைகளாக இந்த நரம்புகள் பிரிந்து செல்கின்றன. இந்த நரம்பில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் அவை கால் வரை பாதித்து இம்சை தருகிறது.
அதனை நிவர்த்தி செய்ய ஆயுர்வேதத்தில் பல அரிய சிகிச்சைகள் உள்ளன. வீட்டிலேயே நீங்கள் முயன்று பாருங்கள்.

புளி மற்றும் உப்பு :
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

பூண்டு மற்றும் நல்லெண்ணெய் :
பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

சுக்கு மற்றும் விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் , சுக்குப் பொடி 1/4 ஸ்பூன்- இவற்றை சூடாக்கி இளஞ்சூட்டில் முதுகில் த்டவினால் நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் மற்றும் உப்பு :
சூடான நல்லெண்ணையில் கப் உப்பை கரைத்து அதனை கொண்டு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications