Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
தாளாத முதுகுவலியா? வீட்டிலேயே இருக்கக் கூடிய இந்த 5 ஆயுர்வேத பொருட்களை யூஸ் பண்ணுங்க !!
முதுகு வலியா? தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனைகளை தந்துவிடும். கீழ்கண்ட சிகிச்சைகளை முயற்சித்துப் பாருங்கள்.
முதுகு வலி அசாதரணமானது. அதனை அனுபவிப்பர்களுக்குதான் அதன் வீரியம் புரியும். எங்கேயும் செல்ல முடியாமல் முடங்க வேண்டிய நிலைமையும் கூட வரும்.
அதிகப்ப்படியான உடல் பருமனால் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு முதுகுவலி உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு. பிரசவத்திற்கு பின் அதிக பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வாறு முதுவலி வருகிறது?
முதுகிலிருந்து முழங்கால் வரை இரு பெரிய நரம்புகள் செல்கின்றன. அவை அங்கிருந்து பாதம் வரை பல கிளைகளாக இந்த நரம்புகள் பிரிந்து செல்கின்றன. இந்த நரம்பில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் அவை கால் வரை பாதித்து இம்சை தருகிறது.
அதனை நிவர்த்தி செய்ய ஆயுர்வேதத்தில் பல அரிய சிகிச்சைகள் உள்ளன. வீட்டிலேயே நீங்கள் முயன்று பாருங்கள்.

புளி மற்றும் உப்பு :
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

பூண்டு மற்றும் நல்லெண்ணெய் :
பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

சுக்கு மற்றும் விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் , சுக்குப் பொடி 1/4 ஸ்பூன்- இவற்றை சூடாக்கி இளஞ்சூட்டில் முதுகில் த்டவினால் நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் மற்றும் உப்பு :
சூடான நல்லெண்ணையில் கப் உப்பை கரைத்து அதனை கொண்டு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











