Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
தாளாத முதுகுவலியா? வீட்டிலேயே இருக்கக் கூடிய இந்த 5 ஆயுர்வேத பொருட்களை யூஸ் பண்ணுங்க !!
முதுகு வலியா? தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய பிரச்சனைகளை தந்துவிடும். கீழ்கண்ட சிகிச்சைகளை முயற்சித்துப் பாருங்கள்.
முதுகு வலி அசாதரணமானது. அதனை அனுபவிப்பர்களுக்குதான் அதன் வீரியம் புரியும். எங்கேயும் செல்ல முடியாமல் முடங்க வேண்டிய நிலைமையும் கூட வரும்.
அதிகப்ப்படியான உடல் பருமனால் முதுகுவலி உண்டாகும். குறிப்பாக பெண்களுக்கு முதுகுவலி உண்டாவதற்கு பல காரணங்கள் உண்டு. பிரசவத்திற்கு பின் அதிக பெண்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வாறு முதுவலி வருகிறது?
முதுகிலிருந்து முழங்கால் வரை இரு பெரிய நரம்புகள் செல்கின்றன. அவை அங்கிருந்து பாதம் வரை பல கிளைகளாக இந்த நரம்புகள் பிரிந்து செல்கின்றன. இந்த நரம்பில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் அவை கால் வரை பாதித்து இம்சை தருகிறது.
அதனை நிவர்த்தி செய்ய ஆயுர்வேதத்தில் பல அரிய சிகிச்சைகள் உள்ளன. வீட்டிலேயே நீங்கள் முயன்று பாருங்கள்.

புளி மற்றும் உப்பு :
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

பூண்டு மற்றும் நல்லெண்ணெய் :
பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

சுக்கு மற்றும் விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் , சுக்குப் பொடி 1/4 ஸ்பூன்- இவற்றை சூடாக்கி இளஞ்சூட்டில் முதுகில் த்டவினால் நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய் மற்றும் உப்பு :
சூடான நல்லெண்ணையில் கப் உப்பை கரைத்து அதனை கொண்டு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications