Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
சுற்றுப்புற மாசினால் குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினரின் மன நிலை பாதிப்பு-ஓர் ஆய்வு
மாசு நிறைந்த சுற்றுப் புற சூழ் நிலையால் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜி வயதினரின் மன நிலை பாதிக்கின்றது இப்படி ஒரு ஆய்வினை ஸ்வீடனில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஸ்வீட்டனில் உள்ள யுமியா பல்கலைக்கழகத்தில் மாசுபட்ட சூழ் நிலையில் வாழும் சிறு பிள்ளைகள் மற்றும் டீன் வயதினரின் மன நிலைக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்தது.

ஸ்வீடன் நாட்டின் தலை நகரான, ஸ்டாக்ஹோம் மற்றும் நாட்டிலுள்ள கோட்டாலாந்து, ஸ்கானே போன்ற நகரங்களில் வாழும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
மன நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் டீன் ஏஜ் வயதினர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு அதிக மாசு நிறைந்த சுற்றுச் சூழ் நிலையில் வாழும் பிள்ளைகளிடமும், நல்ல ஆரோக்கியமான சுற்றுப் புற சூழ் நிலைகளில் வாழும் பிள்ளைகளிடமும் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில் மன நிலை பாதித்து சிகிச்சை எடுத்துவரும் பிள்ளைகளின் உடலில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு அதிகமாய் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு மாசு நிறைந்த சூ நிலைகளில் வாழ்வதுதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இந்த ஆய்வின் தலைமைஆய்வாளர் 'அன்னா ஔடின்' கூறியது என்னவென்றால், குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதுள்ள பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான மன நிலையில் இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதற்கு மாசு நிறைந்த சுற்றுப் புற சூழல் எதிராக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து வெளி வரும் புகை, சுற்றுப் புற சூழ்நிலைக்கு மிகவும் மோசமன விளைவையே தருகிறது.
ஆகவே சாலை தொடர்பாக ஏற்படும்மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறியுள்ளார்.இந்த ஆய்வுக் கட்டுரை BMJ இதழில் வெளிவந்துள்ளது.
மக்கள் தொகை குறைந்த, வளர்ந்த நாட்டிலேயே மாசுபட்ட காற்றினால் குழந்தை மற்றும் இளைஞர்களுக்கு பிரச்சனை என்றால், உலக அளவில் மக்கள் தொகை பெருக்கத்தில் இரண்டாவது இடம் பெற்ற , இன்னும் வளர வேண்டிய நம் இந்தியாவில் இது இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும். நம் இளைய தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


