Just In
- 3 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சுற்றுப்புற மாசினால் குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினரின் மன நிலை பாதிப்பு-ஓர் ஆய்வு
மாசு நிறைந்த சுற்றுப் புற சூழ் நிலையால் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜி வயதினரின் மன நிலை பாதிக்கின்றது இப்படி ஒரு ஆய்வினை ஸ்வீடனில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஸ்வீட்டனில் உள்ள யுமியா பல்கலைக்கழகத்தில் மாசுபட்ட சூழ் நிலையில் வாழும் சிறு பிள்ளைகள் மற்றும் டீன் வயதினரின் மன நிலைக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்தது.
ஸ்வீடன் நாட்டின் தலை நகரான, ஸ்டாக்ஹோம் மற்றும் நாட்டிலுள்ள கோட்டாலாந்து, ஸ்கானே போன்ற நகரங்களில் வாழும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
மன நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் டீன் ஏஜ் வயதினர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு அதிக மாசு நிறைந்த சுற்றுச் சூழ் நிலையில் வாழும் பிள்ளைகளிடமும், நல்ல ஆரோக்கியமான சுற்றுப் புற சூழ் நிலைகளில் வாழும் பிள்ளைகளிடமும் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வில் மன நிலை பாதித்து சிகிச்சை எடுத்துவரும் பிள்ளைகளின் உடலில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு அதிகமாய் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு மாசு நிறைந்த சூ நிலைகளில் வாழ்வதுதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இந்த ஆய்வின் தலைமைஆய்வாளர் 'அன்னா ஔடின்' கூறியது என்னவென்றால், குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதுள்ள பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான மன நிலையில் இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதற்கு மாசு நிறைந்த சுற்றுப் புற சூழல் எதிராக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து வெளி வரும் புகை, சுற்றுப் புற சூழ்நிலைக்கு மிகவும் மோசமன விளைவையே தருகிறது.
ஆகவே சாலை தொடர்பாக ஏற்படும்மாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கூறியுள்ளார்.இந்த ஆய்வுக் கட்டுரை BMJ இதழில் வெளிவந்துள்ளது.
மக்கள் தொகை குறைந்த, வளர்ந்த நாட்டிலேயே மாசுபட்ட காற்றினால் குழந்தை மற்றும் இளைஞர்களுக்கு பிரச்சனை என்றால், உலக அளவில் மக்கள் தொகை பெருக்கத்தில் இரண்டாவது இடம் பெற்ற , இன்னும் வளர வேண்டிய நம் இந்தியாவில் இது இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும். நம் இளைய தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.