Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
காய் நறுக்க பலகையை உபயோகப்படுத்தறீங்களா? இதுலெல்லாம் கவனமா இருங்க!
சுத்தம் சோறு போடும் என்பதை போல் நாம் உபயோகப்படுத்தும் காய் நறுக்கும் ப்லகையிலும் சுகாதாரம் பேணாவிட்டால் உடல் நலக் குறைவு உண்டாகும். கவே அதனை எப்படி பர்மாரிக்கலாம் என்பதுதான் இங்கே பார்க்கிறோம்
நாம் நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைக்கிறோம். ஆனால் சமைக்கும் நேரம், நறுக்கும் முறை, மற்றும் உபயோகப்படுத்தும் கத்தி, பலகையில் கூட சத்துக்கள் விரயம், மற்றும் கிருமித் தொற்று உண்டாகும் அபாயம் இருக்கிறது.

சின்ன சின்ன விஷயங்கள் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே.
நாம் உபயோகப்படுத்துகின்ற நறுக்கும் பலகையிலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. என்னவென்று பார்க்கலாம்.

கண்ணாடி பலகை :
கண்ணாடி பலகை எளிதில் சுத்தம் பண்ணிடலாம். கறை, நாற்றம் உண்டாகாது. ஆனால் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் கத்தி நம் கையை பதம் பார்த்து விடும். அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் முக்கியம்.

இறைச்சிக்கு ஒரே பலகையா?
இறைச்சி மற்றும் காய்களை நறுக்கவும் ஒரே பலகையை உபயோகப்படுத்துதல் கூடாது. இறைச்சியிலிருந்து உருவாகும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற நுண்கிருமிகள் பலகையிலேயே தங்கிவிட வாய்ப்புண்டு.
இதனால் தொற்று நோய்கள், மற்றும் வயிற்று உபாதைகள் வரக் கூடும்.ஆகவே இறைச்சியை நறுக்க தனியாக பலகையை பயன்படுத்த வேண்டும்

பலகையை எப்படி கழுவுகிறீர்கள் :
நீங்கள் பிளாஸ்டிக் பலகையை உபயோகப்படுத்தினால் கழுவிய பின் பாத்திரங்கள் வடிகட்டும் டப்பில் போடலாம். ஆனல் மரப்பலகையை அவ்வாறு போடக் கூடாது.
உடனடியாக கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். சமையல் சோடாவைப் பயன்படுத்தி பலகைகளை கழுவினால் நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

காய வைக்காமல் இருந்தால் :
பலகையை நன்றாக உலர வைக்காமல் இருந்தால் அதில் வாசம் மற்றும் கிருமிகள் தங்கும் வாய்ப்புகள் அதிகம் அதனால் கட்டாயம் நன்றாக காய வைத்தே உபயோகப்படுத்தினால் தொற்றுக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

பலகையில் வெட்டுக்கள் தடுக்க :
பலகையில் நறுக்கும் போது அதில் வெட்டுக்கள் உண்டாகாமல் தடுக்க முடியாது. அந்த வெட்டுக்களில் அழுக்குகள் சேர்ந்து அவை கிருமிகள் பெருக வழியை தரும். அந்த வெட்டுக்கள் உருவாகாமல் தடுக்க, பலகையில் எண்ணெய் தடவி காய சில நிமிடங்களுக்கு பிறகு நறுக்கினால் வெட்டுக்கள் உண்டாகாது.



Click it and Unblock the Notifications











