For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசமர இலையின் அற்புத பயன்கள்

இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரங்களில் ஒன்று அரசமரம். அரசமர இலைகள் குளுக்கோஸ், வைட்டமின், ஸ்டெராய்டு, மெத்தயோனின் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது.

By Saranraj
|

நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்தார்கள், இயற்கையை அழித்து வாழவில்லை. ஆனால் நாம் நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிவிட்டோம். நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் மருந்துகளாக பயன்படுத்தினார்களோ அவற்றை உதாசீனப்படுத்தி மேற்கத்திய மருந்துகளை நாடிச்சென்றதன் விளைவுதான் இப்பொழுது மிகக்குறைந்த வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

benefits-peepal-leaf

அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரசமரம்

அரசமரம்

அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம்.

சளி மற்றும் காய்ச்சல்

சளி மற்றும் காய்ச்சல்

தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் அரசமர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

அரசமர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையதுதான். அரசமர இலைகளையும், காய்களையும் எடுத்து காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அவற்றை சமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த பொடியை நீருடன்கலந்து 14 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் அற்புத பலனையளிக்கும்.

கண்வலி

கண்வலி

அரசமரத்து இலைகளின் பால் கண்வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். கண்வலி இருக்கும்போது அரசமர இலைகளை கசக்கி அதனை கண்களில் ஊற்றினால் சில நிமிடங்களில் வலி குறைய தொடங்கும்.

பல் ஆரோக்கியம்

பல் ஆரோக்கியம்

அரசமரத்தின் கொளுந்து இலைகள் அல்லது புதியதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்குவது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு பற்களை பாக்டீரிய தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

பாம்புக்கடி

பாம்புக்கடி

ஒருவேளை பாம்புக்கடித்துவிட்டால் அரசமர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் கொடுத்தால் அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது.

 மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது.

சருமபாதுகாப்பு

சருமபாதுகாப்பு

இதன் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில் இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல் பாதுகாப்பு

சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கலை குணமாக்க இது சிறந்த மருந்து. சிறிதளவு அரசமர இலையின் தூள், சோம்பு மற்றும் வெல்லத்தை எடுத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து தூங்க செல்லும்முன் குடிக்கவும். சிலமணி நேரங்களிலியே உடனடி நிவாரணத்தை உணரலாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

சில கொளுந்து அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை சேர்த்து பின் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து வாயில் போட்டு மென்றால்வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வை பெறலாம்.

சர்க்கரைநோய்

சர்க்கரைநோய்

சர்க்கரைநோய் பிரச்சினை உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு தானாக குறையும்.

இரத்த சுத்திகரிப்பு

இரத்த சுத்திகரிப்பு

சிறிதளவு அரசமர விதை தூளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். இரைப்பை சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள் இதில் கசாயம் தயாரித்து அதனுடன் தென் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

benefits of peepal leaf

According to the science of Ayurveda, every part of the peepal tree - the leaf, bark, shoot, seeds and its fruit has several medicinal benefits, and it is being used since ancient times to cure many diseases.
Desktop Bottom Promotion