Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?
நூறு வயாகராவுக்கு சமமான ஜாதிக்காயின் செக்சுவல் ஹெல்த் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும்.
ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய்.

#1
ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது.

#2
நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

#3
மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #1
முதலில் ஜாதிக்காயை சிறிதளவு நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும். கருகும்படி செய்திட கூடாது. பிறகு அது பயனற்றதாகிவிடும். அதிகபட்சம் ஒரு நிமிடத்தில் இருந்து ஒன்றரை நிமிடம் வறுத்தால் போதுமானது.

ஜாதிக்காய் பால் | செய்முறை #2
இளம் சூட்டில் நெய்யில் வறுத்த ஜாதிக்காயை, அதன் சூடு தணியும் வரை ஆறவைத்து, பிறகு அதை மிக்ஸி அல்லது வேறு இடிக்கும் கருவி ஏதேனும் பயன்படுத்தி நன்கு நைஸாக பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #3
நெயில் வறுத்து எடுத்து, பொடித்து வைத்துள்ள ஜாதிக்காய் தனியாக காற்று அல்லது நீர் புகாதவண்ணம் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும்.

நன்மை!
தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும் என்று கூறப்படுகிறது. இது இயற்கையான வைத்தியம். ஜாதிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு பாலில் சேர்த்து கலந்து குடித்து வந்தால் போதுமானது. அதிகமாக சேர்ப்பது ஏதனும் பக்க விளைவுகளை அல்லது வயிற்று கோளாறுகள் ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











