Just In
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்களாம்... இவங்ககிட்ட எதுக்கும் போட்டி போடாதீங்க...!
- 1 hr ago சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் பெரிய பணப் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
- 5 hrs ago வார ராசிபலன் (14 April 2024 To 20 April 2024) - சித்திரை முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது..
Don't Miss
- News சாதியின் பெயரால் தீண்டாமை கூடாது.. ‘சமத்துவ நாள்’ உறுதிமொழி ஏற்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
- Movies Dharsha gupta: தாமரைப்பூவுடன் வாழ்ந்து சொன்ன தர்ஷா குப்தா.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
- Sports அவர்கள் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. ஆளுமையுடன் இருக்கிறார் ருதுராஜ்.. பிளெமிங் ஆதரவு!
- Finance உங்கள் பான் - ஆதார் கார்டை இணைச்சிட்டீங்களா? எழுந்த புதிய பிரச்னை.. இப்படி ஒரு சிக்கலா?
- Technology இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..
- Automobiles ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
மருத மரங்கள் உங்க ஊர்ல இருக்கா? அதனோட அற்புதங்கள் தெரியுமா?
மருத மரத்தின் மருத்துவ நன்மைகளையும், அதன் நோய்களை குணபப்டுத்தும் தன்மையையும் இந்த கட்டுரையில் காணலாம்.
உயரிய மூலிகை மருத்துவ சிறப்புகளால், திருமருது என சங்ககாலத்தில் போற்றப்பட்ட மருத மரம், மனிதர்க்கு உடற்பிணி தீர்க்கும் அருமருந்தாக, சித்த மூலிகை மருத்துவத்தில் பயன் தருகிறது.
ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரத்தில் உள்ள பல வகைகளில், பெரும்பான்மை மரங்கள் மனிதருக்கு நன்மை தருவனவாகவும், சிலவகை மரங்கள் வீடுகளுக்கு வாசல் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள் செய்யப் பயனாகின்றன. ஆயினும் தற்காலத்தில் வெகு அரிதாகவே, சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.
சிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்ட, சிவந்த நிறமுடைய மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
தமிழகத்தின் கோயமுத்தூர் மாநகர் அருகே, மருதமரங்கள் நிறைந்து சோலைவனமாகத் திகழ்ந்த, தமிழ்க்கடவுள் குமரன் குடியிருக்கும் மலையே, மருதமலை என இன்றும் அழைக்கப்படுகிறது.
வைகை ஆற்றின் கரையோரம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், மருதத்துரை எனும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாள் நகரமே, இன்று மருவி, மதுரை என வழங்கப்படுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.