Just In
- 4 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- 5 hrs ago புகைப்பிடிப்பவர்களுக்கு முடி இளம் வயதிலேயே நரைக்குமா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
- 5 hrs ago உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 6 hrs ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
Don't Miss
- News அண்ணாமலை திடீர் சாலைமறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Automobiles 31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
மரிக்கொழுந்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
வாசனை நிரம்பிய இலைகள் மலர்களை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? வாசம் நாசியை நெருங்கும் வரை, ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும், நாசியில் ஏறி சுவாசத்தில் வாசனை கலந்த பின், எதிர்ப்புக் காற்று கூட வராது, மனிதர்களுக்கு இயற்கையின் அன்பளிப்பே, நறுமணம்!
நறுமண மலர்கள், இலைகளைப் பார்த்திருப்போம், பழங்களைக்கூட பார்த்திருப்போம், ஒரு செடியே நறுமணமாக இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? தூரத்தில் இருக்கும்போதே, வாசனை மனதை மயக்கும்.
மரிக்கொழுந்து! பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!
நமது தேசத்தில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் மரிக்கொழுந்து, வாசனை மலர் மாலைகளிலும், மலர்ப் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமண மூட்டியாகவும், பயன்படுகிறது. அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும்.
மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.
மனிதரின் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் தன்மை மிக்கது, சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கக் கூடியது.