Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
எந்த நோய்க்கு எந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமா?
இயற்கையாக வளரும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள் பலவித நோய்களை தடுக்கின்றன. எந்த மூலிகை எந்த நோயை குணப்படுத்துகிறது என பார்க்கலாம்.
நம் இந்தியாவில் கணக்கிலடங்கா அற்புத மூலிகைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை மிகச் சாதரணமாக சாலையோரத்திலும், வேலிகளிலும் வளர்கின்றது நம் அதிர்ஷ்டம். ஆனால் நாம் எத்தனை பேர் அந்த மூலிகைகளின் குணங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்.
பல வித நோய்கள தீர்க்கக் கூடிய மிகச் சாதரணமாக விளையக் கூடிய செடிகள்தான் அரிய நோய்களையும்,. ஆபத்தையும் போக்குகின்றன. அவற்றைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.

அருகம்புல் :
மூல வியாதியை குணப்படுத்தும். விஷத்தின் வீரியத்தை முறிக்கும். அல்சர் வரமல் காக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோயயை கட்டுப்படுத்தும்.

நில வேம்பு:
காய்ச்சல் மற்றும் கபம் அகற்றும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதனை வற்றச் செய்யும்.

வல்லாரை:
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்., காமாலைக்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும்.

நெல்லிக்காய்:
பித்தத்தை தணிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். , கபத்தை கரைக்கும். மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

வெந்தயம்:
பித்தத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும். காச நோய்க்கு மருந்தாகும்.

ரோஜாபூ:
இதயத்தை பலப்படுத்தும். , கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது.

திரிபலாசூரணம் :
வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது.



Click it and Unblock the Notifications