Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
எந்த நோய்க்கு எந்த மூலிகையை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரியுமா?
இயற்கையாக வளரும் ஆயுர்வேத மூலிகை மருந்துகள் பலவித நோய்களை தடுக்கின்றன. எந்த மூலிகை எந்த நோயை குணப்படுத்துகிறது என பார்க்கலாம்.
நம் இந்தியாவில் கணக்கிலடங்கா அற்புத மூலிகைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவை மிகச் சாதரணமாக சாலையோரத்திலும், வேலிகளிலும் வளர்கின்றது நம் அதிர்ஷ்டம். ஆனால் நாம் எத்தனை பேர் அந்த மூலிகைகளின் குணங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்.
பல வித நோய்கள தீர்க்கக் கூடிய மிகச் சாதரணமாக விளையக் கூடிய செடிகள்தான் அரிய நோய்களையும்,. ஆபத்தையும் போக்குகின்றன. அவற்றைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.

அருகம்புல் :
மூல வியாதியை குணப்படுத்தும். விஷத்தின் வீரியத்தை முறிக்கும். அல்சர் வரமல் காக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோயயை கட்டுப்படுத்தும்.

நில வேம்பு:
காய்ச்சல் மற்றும் கபம் அகற்றும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதனை வற்றச் செய்யும்.

வல்லாரை:
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்., காமாலைக்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும்.

நெல்லிக்காய்:
பித்தத்தை தணிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். , கபத்தை கரைக்கும். மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.

வெந்தயம்:
பித்தத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும். காச நோய்க்கு மருந்தாகும்.

ரோஜாபூ:
இதயத்தை பலப்படுத்தும். , கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறு நீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது.

திரிபலாசூரணம் :
வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது.



Click it and Unblock the Notifications











