Just In
- 1 hr ago உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- 2 hrs ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 4 hrs ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- News சூசை வீட்டுக்குள்ள போன ஸ்டாலின்.. "கனிமொழி உங்க வீட்டு பொண்ணு, மறந்துடாதீங்க".. பூரித்த தூத்துக்குடி
- Automobiles இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
- Technology அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
- Movies அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர்.. நடந்தது என்ன நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
- Education முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா...
- Finance ரஷ்யாவுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம்!
வெடிக்கும் கனிகள்
உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.
இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இதில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.
விஷ ஜூரத்திற்கு மருந்து
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது
இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
பற்களை பாதுகாக்கும்
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.