Just In
- 31 min ago
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- 1 hr ago
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- 2 hrs ago
ஆண்களே! 'அந்த' விஷயத்தில் உங்க மனைவியை எப்படி திருப்திப்படுத்தணும் தெரியுமா?
- 3 hrs ago
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...
Don't Miss
- Automobiles
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்!
- News
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Movies
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
74% இந்தியர்களுக்கு இதய நோய்: நீரிழிவின் தலைநகரம் சென்னை
இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் 74 சதவிகிதம் பேருக்கு இதயநோய் பாதிப்பு உள்ளது. சென்னை மாநகரம் நீரிழிவின் தலைநகரமாக மாறிவருகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டு நாடுமுழுவதும் மருத்துவத்துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இளைய தலைமுறை பாதிப்பு
இந்தியாவில் மொத்தம் 22 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர். 40 முதல் 44 வயதுடைய பெண்கள் 72 சதவிகிதம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதேபோல் 30 முதல் 34 வயதுடையவர்களில் 57 சதவிகிதம் பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாறிவரும் வாழ்க்கை முறை
உடல் உழைப்பு குறைந்துள்ளதும், உடற்பயிற்சி இல்லாத காரணத்தினாலும்தான் இளைய தலைமுறையினர் இதயநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வினை மேற்கொண்ட இதயநோய் மருத்துவ நிபுணர் சோமசுந்தரம் கூறியுள்ளார். புகைப்பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவைகளும் இதயநோய் ஏற்படக் காரணமாகின்றன.
அதிகரிக்கும் உயிரழப்பு
1990 களில் 30-44 வயதுவரை உடைய 11,75,0000 பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 25,84,000 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 6ல் ஒரு இளைஞர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உடல்பருமனால் இதயநோய்
எல்லா நகரங்களிலும் இந்நோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை.. உணவுப்பழக்கங்கள், தவறான சில பழக்கங்களே இதய நோய் பாதிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர்,டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் வசிப்போர் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் இதயநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 57 சதவீத பெண்களுக்கு 30 வயதிலேயே பாதிப்புகள் காணப்படுகின்றன.
நீரிழிவின் தலைநகரம்
சென்னை மாநகரை பொறுத்தவரை 23 சதவீதம் பேர் இதய நாள நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கே இந்நோய் அதிகளவில் உள்ளது. தவிர 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சென்னை ‘நீரிழிவின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஐதராபாத், பெங்களூர் நகரங்கள் உள்ளன.