Just In
- 24 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
74% இந்தியர்களுக்கு இதய நோய்: நீரிழிவின் தலைநகரம் சென்னை
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டு நாடுமுழுவதும் மருத்துவத்துறை சார்பில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இளைய தலைமுறை பாதிப்பு
இந்தியாவில் மொத்தம் 22 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர். 40 முதல் 44 வயதுடைய பெண்கள் 72 சதவிகிதம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதேபோல் 30 முதல் 34 வயதுடையவர்களில் 57 சதவிகிதம் பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாறிவரும் வாழ்க்கை முறை
உடல் உழைப்பு குறைந்துள்ளதும், உடற்பயிற்சி இல்லாத காரணத்தினாலும்தான் இளைய தலைமுறையினர் இதயநோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வினை மேற்கொண்ட இதயநோய் மருத்துவ நிபுணர் சோமசுந்தரம் கூறியுள்ளார். புகைப்பழக்கம், மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவைகளும் இதயநோய் ஏற்படக் காரணமாகின்றன.
அதிகரிக்கும் உயிரழப்பு
1990 களில் 30-44 வயதுவரை உடைய 11,75,0000 பேர் இதயநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 25,84,000 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 6ல் ஒரு இளைஞர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உடல்பருமனால் இதயநோய்
எல்லா நகரங்களிலும் இந்நோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை.. உணவுப்பழக்கங்கள், தவறான சில பழக்கங்களே இதய நோய் பாதிப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர்,டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் வசிப்போர் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் இதயநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 57 சதவீத பெண்களுக்கு 30 வயதிலேயே பாதிப்புகள் காணப்படுகின்றன.
நீரிழிவின் தலைநகரம்
சென்னை மாநகரை பொறுத்தவரை 23 சதவீதம் பேர் இதய நாள நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கே இந்நோய் அதிகளவில் உள்ளது. தவிர 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சென்னை ‘நீரிழிவின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஐதராபாத், பெங்களூர் நகரங்கள் உள்ளன.