Just In
- 4 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நவராத்திரியில் உடல் உபாதைகளை சமாளிக்க குடிக்க வேண்டிய பானங்கள்!!
நவராத்திரி என்றாலே கொலு, கோவில் , வீட்டில் தினந்தோறும் பிரசாதம் செய்வது என வேலைகள் பெண்களுக்கு இரு மடங்காகும்.
அதோடு அக்கம்பக்கம் வீட்டிற்கு சென்று , விசேஷத்திற்கு அழைத்து, வந்தவர்களை உபசரித்து என மாறி மாறி பயங்கர பிஸியில் பெண்களும் குழந்தைகளும் இருப்பார்கள்.
நவராத்திரி கல்கத்தாவிலும் மிகவும் விசேஷம். ஒன்பது நாளும் கொண்டாட்டமாகவே இருக்கும். உறவினர்கள் ஒன்று கூடுவது,. பலப்பல உணவுகளை சாப்பிடுவது. விடியும் வரை கொண்டாட்டமாக இருப்பது என மகிழ்ச்சியாய் இந்த விசேஷங்களை அனுபவிப்பார்கள்.
அவர்கள் இந்த நவராத்திரியில் பல பானங்களை தயாரித்து அவற்றை எல்லாருக்கும் பகிர்ந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியர்களில் கலாச்சாரத்தை கூறும் பண்டிகைகளில் ஒன்று.
இந்த மாதிரியான சமயங்களில் உடல் அசதி ஒருபக்கம், குளிர் மழை என சேர்ந்து உடலில் சோர்வையும், நோய்களையும் தந்து விடும். இந்த விசேஷமான நவராத்திரியில் எப்படி உடல் உபாதை களை சமாளிக்கலாம் என பார்க்கலாம்.
நீர் அருந்துங்கள் :
நிறைய நீர் அருந்துங்கள். ஏனெனில் ஓடியாடி செய்யும் வேலைகளால் நிறைய நீரிழப்பு ஏற்படும். எனவே அவ்வப்போது நீர் குடிக்க மறந்துவிடாதீர்கள்.
கரும்பு சாறு :
இந்த சமயத்தில் எனர்ஜி குறைந்திருக்கும். எனவே கரும்புச் சாறு குடியுங்கள். இதனால் உடலுக்கு தேவையான குளுகோஸ் பெற்று உடனடி சக்தியை பெறுவீர்கள்.
இள நீர் :
உடல் சோர்வை போக்க இள நீர் அவசியம் குடியுங்கள். உங்கள் உடலிற்கு தேவையான மினரல் சத்துக்களை பெறுவீர்கள்.
எலுமிச்சை சாறு :
மழை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க விட்டமின் சி அதிகம் தேவை. எனவே எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது மிகவும் நலது. நோய் எதிர்ப்பு சக்தி கூடு தெம்பு கிடைக்கும்.
இஞ்சி தேநீர் :
இஞ்சி தேநீர் உடனடி சத்தினையும் புத்துணர்வையும் தரும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது. ஆகவே இஞ்சி டீயை குடிக்கலாம்.
லஸ்ஸி :
பண்டிகையின்போது பலபேர் வீட்டுக்கு சென்று பலதரப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டியது வரும்.
லஸ்ஸி குடிப்பதால் பண்டிகை காலங்களில் ஏற்படும் உங்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும். இரைப்பையில் நல்ல பேக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் அஜீரண பிரச்சனைகள் ஓடிவிடும்.
மோர் :
லஸ்ஸியியை போல் இன்னொரு சத்துக்கல் நிறைந்தது மோர். எளிமையான பானம். ஜீரண சக்தியை அதிகரிக்கும். தெம்பு தரும். கால்சியம் நிறைந்தது.
சர்பத் :
மிகவும் சோர்வு தலைகாட்டும் நேரத்தில் சர்பத் குடிப்பது நல்லது. இது பால் மற்றும் பழங்களால் செய்யப்படுபவை. இதனை கடைகளில் செயற்கை இனிப்புகளை போட்டு செய்வார்கள். ஆகவே கடைகளில் செய்யாமல் வீட்டிலேயே செய்து குடிக்கலாம்.
பழச் சாறுகள் :
பண்டிகை காலங்கலில் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. நேரம் காலமில்லாத உழைப்பால் சத்துக்கள் குறைந்திருக்கும். இந்த சமயங்களில் பழச் சாறுகள் கட்டாயம் குடியுங்கள்.
பானகம் :
கல்கத்தாவில் இந்த சமயத்தில் புளியினால் செய்த பானத்தை அனைவருக்கும் தருவார்கள். இவற்றின் சுவை வாயில் உமிழ் நீரை சுரக்கச் செய்யும்.
சூப் :
சூப் குடிப்பதால் உடல் புத்துணர்வும் தெம்பும் தரும். அதோடு சோர்வினால் வரும் மன அசதியை போக்க சூப் குடித்துப் பாருங்களேன். புது உற்சாகம் கிடைக்கும்.
தர்பூசணி வெள்ளரிக்காய் :
தர்பூசணி அல்லது வெள்ளரிக்காயை பருகுங்கள். காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கப்படும். பொதுவாகவே குளிர்காலங்களில் வெள்ளரிக்காய் நீரிழப்பை தடுக்கும்.
பனீர் பானம் :
வீட்டில் செய்யப்படும் பனீர் வடிகட்டிய பின் மிகுந்த நீரை பழச் சாறுகளில் கலந்து பானம் தயார் செய்வார்கள். இது உடலுக்கு கால்சியம், எலும்புகளுக்கு பலத்தை தரும்.
சாக்லேட் மில்க் :
சாக்லேட் மில்க் மிகுந்த சுவை நிறைந்ததாகவும், உடனடி எனர்ஜியை தருவதாகவும் இருக்கும். இது போன்ற பானங்களிய கல்கத்தாவில் தயாரித்து சுவைத்து மகிழ்வார்கள்.
பாதாம் பால் :
பாதாம் பால் அதிக மினரல் மற்றும் விட்டமின்களை பெற்றுள்ளது. தசைகளில் உண்டாகும் வலியை போக்கி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது.