Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
மாத விடாய் வலியை போக்க இந்த மூலிகை ஜூஸை குடிச்சு பாருங்க !!
மாதவிடாய் காலத்தில் வரும் வலியினால் சில பெண்கள் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு உண்டாகும் வலியை போக்க, இந்த முருங்கை இலை ஜூஸை குடித்தால் வலி மறைந்து உடல் பலம் பெறும்.
28 நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதவிலக்கு பெண்களின் ஆரோக்கியமான தேகத்தையே குறிக்கிறது. அதே போல் வலியும் இயற்கையானதே.

இப்போது 10- 13 வயதுக்குள்ளாகவே பெண் குழந்தைகள் வயதிற்கு வருகிறார்கள். ஒரு சிலருக்கு இயல்பாக இருக்கும். சிலர் தாங்க முடியாத வலியினால் அவதிப்படுவார்கள். இதற்கு வலி குறைய மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பெருந்தவறு.

ஏன் வலி உண்டாகிறது?
மாத விடாய் சமயத்தில் இறுகிப்படித்திருந்த தசைகள் சுருங்கி உதிரப்போக்கு ஏற்படும்போது, கர்ப்பப்பை இறுகி, தசைகளில் வலியை உண்டாக்குகிறது.
அவ்வாறு இறுகுவதால் கர்ப்பப்பையிலிருந்து அதிக ரத்தச் சசிவு உண்டாகாமல் தடுக்கப்படும். எனவேதான் அடிவயிற்றில் வலி உண்டாகும்.

முருங்கை இலை ஜூஸ் :
முருங்கை இலையில் அதிக இரும்புச் சத்து உள்ளது. அதோடு கால்சியம், மினரல் ஆகியவைகளும் இருக்கின்றன. இவை கர்ப்பப்பையை வலுப்படுத்தும் .
வலியை குறைக்கும். ரத்த சோகை உண்டாகாமல் உடலை வலுப்படுத்தும். அதனை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

தயாரிக்கும் முறை :
தேவையானவை :
முருங்கை இலை - கைப்பிடி அளவு
தேன் - 1 ஸ்பூன்
நீர் - கால் கப்

செய்முறை :
முருங்கை இலையில் நீர் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். பிறகு அதன் சாற்றை பிழிந்து எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.

எப்போது பருகலாம்?
மாத விடாயின் போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தால் வலி குறைந்து தெம்பாக வலம் வருவீர்கள்



Click it and Unblock the Notifications











