Latest Updates
-
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!!

அதற்காகவே ஜிம் மற்றும் யோகா செய்யும் நேரத்தில் பாட்டை கேட்கிறார்கள். இதனால் டென்சன் இருந்தால் கூட மறைந்து, உள்ளமானது அமைதி பெறும். அப்படி உள்ளத்தை அமைதிப்படுத்த மற்றும் உடலில் சக்தி பெற எவ்வாறெல்லாம் மற்றும் எப்போது பாட்டை கேட்கலாம் என்று பார்ப்போமா!!!
பாட்டைக் கேட்டால்...
1. பாட்டானது வேகமாக, நல்ல பீட்ஸ்ஸோடு எனர்ஜி அளவை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் மிகவும் சோம்பலாக இருக்கும். அப்போது நல்ல பீட்ஸ் இருக்கும், மிகவும் பிடித்த பாட்டை வீட்டில் இருக்கும் ப்ளேயரில் செட் செய்துவிட்டு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதோடு, உள்ளமும் உற்சாகமாக இருக்கும்.
2. காலையில் அல்லது மாலையில் 'ஜாக்கிங்' அல்லது 'ரன்னிங்' செய்வோம். அப்போது மனதை புத்துணர்ச்சி செய்யும் வகையில் இருக்கும் பாட்டை கேட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அவ்வாறு கேட்கும் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை ரசித்து பாடுவது போல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறெல்லாம் பாட்டை கேட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.
3. வீட்டில் ஏதேனும் சண்டையால் மனமானது பெரும் துன்பத்தில் மற்றும் அழுத்ததில் இருக்கும். ஆகவே அப்போது காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அழுத்தமானது குறையும். மேலும் புகழ் பெற்ற 'ரிஹானா' பாட்டுகளை கேட்டால் மனமானது உறுதியடைவதோடு, மன அழுத்தமும் குறையும்.
4. எப்போதெல்லாம் யோகா செய்கியோமோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் மென்மையான மியூசிக்கை கேட்கலாம். ஏனெனில் யோகா செய்தால் மனமும், உடலும் ரிலாக்ஸ் அடைகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் மியூசிக்கானது மென்மையாகவும், அமைதியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆகவே பாட்டை கேளுங்க!!! மனசை ரிலாக்ஸா வெச்சுக்கோங்க!!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications