Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
பாட்டு கேட்டால் உடலில் 'எனர்ஜி' அதிகரிக்குமா!!!

அதற்காகவே ஜிம் மற்றும் யோகா செய்யும் நேரத்தில் பாட்டை கேட்கிறார்கள். இதனால் டென்சன் இருந்தால் கூட மறைந்து, உள்ளமானது அமைதி பெறும். அப்படி உள்ளத்தை அமைதிப்படுத்த மற்றும் உடலில் சக்தி பெற எவ்வாறெல்லாம் மற்றும் எப்போது பாட்டை கேட்கலாம் என்று பார்ப்போமா!!!
பாட்டைக் கேட்டால்...
1. பாட்டானது வேகமாக, நல்ல பீட்ஸ்ஸோடு எனர்ஜி அளவை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் மிகவும் சோம்பலாக இருக்கும். அப்போது நல்ல பீட்ஸ் இருக்கும், மிகவும் பிடித்த பாட்டை வீட்டில் இருக்கும் ப்ளேயரில் செட் செய்துவிட்டு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதோடு, உள்ளமும் உற்சாகமாக இருக்கும்.
2. காலையில் அல்லது மாலையில் 'ஜாக்கிங்' அல்லது 'ரன்னிங்' செய்வோம். அப்போது மனதை புத்துணர்ச்சி செய்யும் வகையில் இருக்கும் பாட்டை கேட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அவ்வாறு கேட்கும் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை ரசித்து பாடுவது போல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறெல்லாம் பாட்டை கேட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.
3. வீட்டில் ஏதேனும் சண்டையால் மனமானது பெரும் துன்பத்தில் மற்றும் அழுத்ததில் இருக்கும். ஆகவே அப்போது காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அழுத்தமானது குறையும். மேலும் புகழ் பெற்ற 'ரிஹானா' பாட்டுகளை கேட்டால் மனமானது உறுதியடைவதோடு, மன அழுத்தமும் குறையும்.
4. எப்போதெல்லாம் யோகா செய்கியோமோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் மென்மையான மியூசிக்கை கேட்கலாம். ஏனெனில் யோகா செய்தால் மனமும், உடலும் ரிலாக்ஸ் அடைகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் மியூசிக்கானது மென்மையாகவும், அமைதியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆகவே பாட்டை கேளுங்க!!! மனசை ரிலாக்ஸா வெச்சுக்கோங்க!!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications