Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ப்ரீ டயப்பட்டீஸ் ஸ்டேஜில் இருப்பதை கண்டுபிடிக்க சில வழிமுறைகள் !
வழக்கத்தை விட ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் ப்ரீ டயாப்பட்டீஸ் ஆகும். அதிலிருந்து மீள்வதற்கான வழிகள்
உலகளவில் அதிகமான சர்க்கரை நோயாளிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவுப் பழக்கத்தாலும் சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது. சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நோய் வருவதற்கு முன்னதாகவே நாம் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது.

அளவுகள் :
பொதுவாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் முதல் 125 மில்லி கிராம் வரையிலும் உணவுக்குப் பிறகு 140 கிராம் முதல் 199 மில்லி கிராம் வரை இருந்தால் அவருக்கு பிற்காலத்தில் அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகம்.

யாருக்கெல்லாம் வரும் :
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், கர்ப்பத்தின் போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்கள், அதிகமான ஜன்க் ஃபுட் சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு எல்லாம் ப்ரீ டயாப்பட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உடலின் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மூன்று மாத சோதனை :
ப்ரீ டயாப்பட்டீஸையும் சர்க்கரை நோய்க்கான சோதனை மூலமாகவே அறிந்து கொள்ளலாம். சிலர் ரத்தப்பரிசோதனை செய்யும் சில நாட்களுக்கு முன்னர் சர்க்கரை உணவுகளை தவிர்த்தால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும் என்று நினைப்பார்கள். இது முற்றிலும் தவறானது.
ஹெச்.பி.ஏ.1சி என்ற பரிசோதனையின் மூலம் கடந்த மூன்று மாதங்களாக உங்கள் உடலின் சர்க்கரை அளவு என்ன இருந்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

உணவுப்பழக்கம் :
உணவையும், உடல் எடையை கட்டுப்பாடுடன் வைத்திருந்தாலே பாதி நோய்களை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனைப் படி உங்களுக்கு ஏற்ற உணவுப்பழக்கத்தை தொடருங்கள்.

தவிர்த்தல் வேண்டும் :
ப்ரீடயாப்பட்டீஸ் உள்ளது என்று தெரிந்தவுடன், சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட துவங்குங்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனி வகைகளை தவிர்த்திடுங்கள். அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும் எண்ணெயில் பொறித்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

கூடாது :
காலை உணவைத் தவிர்ப்பது, தாமதமாக உணவை எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்யக்கூடாது. இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இரவு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது எதையோ நினைத்து கவலையுடன் இருப்பது கூடாது.



Click it and Unblock the Notifications











