Just In
- 38 min ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...
இங்கு கைகளில் தோல் உரியும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில நேச்சுரல் ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகமாக வெயிலில் சுற்றும் போதும், சருமத்தில் இறந்த செல்கள் தேங்கும் போதும், சருமத்தில் அழுக்குகள், நச்சுக்கள் சேரும் போதும், வறட்சி அதிகமாக இருக்கும் போதும், அளவுக்கு அதிகமாக சோப்பால் சருமத்தைக் கழுவும் போது, சருமத்தின் மேல் அடுக்கு கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக தோல் உரிந்து அசிங்கமாக காட்சியளிக்கும்.
பெரும்பாலும் சருமத் தோல் கோடை மற்றும் குளிர் காலங்களில் தான் அதிகம் இப்பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் கைகளில் தான் அதிகமாக தோல் உரியும். சிலருக்கு கன்னங்களில் உரியும். இந்த பிரச்சனைக்கு இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஸ்கரப்களைக் கொண்டு தீர்வு காணலாம்.
அதிலும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கைகளுக்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், தோல் உரித்து முதுமைத் தோற்றத்தைத் தரும் கைகளை அழகாகவும், பட்டுப் போன்றும் மாற்றலாம். சரி, இப்போது கைகளில் தோல் உரியும் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில நேச்சுரல் ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.
கல் உப்பு + பாதாம் பவுடர் + கற்றாழை ஜெல்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவியதைத் தொடர்ந்து, தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை + தேங்காய் எண்ணெய் + ஜொஜோபா ஆயில்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 4-5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த கலவையை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* பின் கைகள் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
ஓட்ஸ் + சீமைச்சாமந்தி டீ
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் வேக வைத்த ஓட்ஸ் பவுடர் மற்றும் 4 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவி, துணியால் கைகளைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது க்
கொக்கோ வெண்ணெய்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கலந்து, கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
நாட்டுச் சர்க்கரை
* 2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் 4 டீஸ்பூன் க்ரீன் டீயை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த கலவையை இரண்டு கைகளிலும் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவுங்கள்.
* இந்த செயலை செய்த பின், மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
ஷியா வெண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை மாவு
* ஒரு பௌலில் ஷியா வெண்ணெய், 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1/2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை கைகளில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவி, க்ளின்சர் பயன்படுத்துங்
கடலை மாவு , பாதாம் எண்ணெய் , ரோஸ்மேரி ஆயில்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 4- துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் தோல் உரிந்து அசிங்கமாக காணப்படும் கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் கழுவுங்கள்.
* இச்செயலால் கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகள் பட்டுப் போன்று இருக்கும்.
காபி தூள் , தேன்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
* அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி, கைகளை லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கைகள் மென்மையாக இருக்கும்.