Latest Updates
-
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
ஆண்களே! வெயிலால் முகம் கருமையாகாமல் இருக்க, தினமும் இதுல ஒன்னு செய்யுங்க...
இங்கு வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சரும செல்கள் படு மோசமாக பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நமக்கே தெரியாமல் கருப்பாகிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் மற்ற காலங்களை விட, கோடைக்காலத்தில் தான் சரும செல்கள் அதிகமாக பாதிக்கப்படும். எனவே இக்காலத்தில் சருமத்திற்கு சற்று அதிக பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஒருவித எரிச்சலுடன் இருக்கிறது. எனவே கோடையில் சரும பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்கவும், சருமம் கருமையாகாமல் இருக்கவும் ஒருசில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதில் ஏதேனும் ஒன்றை தினமும் பின்பற்றி வந்தாலே போதுமானது.

கடலை மாவு பேக்
கடலை மாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் கருமையாவதும் தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு பேக்
எலுமிச்சை சாறு சரும கருமையைப் போக்க உதவும் பொருட்களுள் சிறந்தது. ஏனெனில் இதில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. ஆகவே எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் அல்லது கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இளநீர் மற்றும் சந்தன பேக்
சந்தனப் பவுடரில் க்ளின்சிங் தன்மையும், இளநீரில் முகத்தைப் பொலிவாக்கும் உட்பொருட்களும் உள்ளது. ஆகவே இவ்விரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.

மஞ்சள் மற்றும் பால் பேக்
மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து, வர, சரும செல்கள் நன்கு பாதுகாப்புடனும், சருமம் கருமையாகாமலும் இருக்கும்.

பப்பாளி மற்றும் தேன் பேக்
பப்பாளியை மசித்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருப்பதோடு, சூரியக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பாகவும் கருமையாகாமலும் இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications