Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் !!
சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் பற்றி காணலாம்.
குருதிநெல்லியில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பும், நொதிகளும் குவிந்து கிடக்க, இதனால் உங்கள் சருமமானதின் ஆரோக்கியமும், தோற்றமும் மெருக்கூட்டப்படுகிறது.
இந்த நெல்லியை நாம் வருடமுழுவதும் சரும கவனிப்பு செயல்களுக்கு பயன்படுத்த, அவை பெயர்பெற்ற பயன்பாட்டினை குளிர்க்காலத்தில் நமக்கு தருகிறது.
இதனால் தான், குருதி நெல்லியில் இருக்கும் பண்புகளால், உங்களுடைய சருமமானதின் சிரமங்கள் நீங்க, காற்றில் இல்லாத ஈரப்பதம் இதில் இருக்கிறதாம்.
குளிர்க்காலத்தில் இந்த நெல்லியை நாம் பயன்படுத்த, உங்கள் சருமம் காய்ந்து போகாமல் தடுப்பதோடு, சீரற்ற சருமத்தை சரியும் செய்ய, இதனால் விரும்பத் தகாத செயல்கள் உங்கள் வழியில் எட்டிப்பார்க்க பயம் கொள்கிறது.

ஒருவேளை, இந்த பழத்தினால் உங்கள் அழகு எப்படி மேம்படும் என்னும் ஆச்சரியம் உங்களுக்கு இருந்தால், அதனை நாங்கள் சொல்ல இதோ முன் வருகிறோம். போல்ட் ஸ்கை பத்திரிக்கை மூலமாக, இந்த குருதி நெல்லி முக ஆடை பயன்பாட்டை பட்டியலிட்டு சொல்லிட, அது வீழ்ச்சியடையும் வெப்ப நிலையினால் உண்டாகும் சரும இயற்கை அழகு மற்றும் பளப்பளப்பு பேரழிவை எப்படி தடுக்க உதவுகிறது என இப்போது நாம் பார்க்கலாம்.
இங்கே இதற்கான செய்முறையை நாம் பார்க்கலாம்.
குறிப்பு: முதலில் சருமத்தில் இதனைக்கொண்டு மூடி சோதனை செய்தப்பின்னர் முகத்தில் தடவுவதால் எத்தகைய சருமத்துக்கு இது சிரமமாக இருக்கும் என்பதை முன்பே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

குருதி நெல்லியுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் கிளிசரின்:
• ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் 5 முதல் 6 குருதி நெல்லியை போட்டு அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர், 1 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 4 முதல் 5 துளி கிளிசரினை சேர்த்துக்கொள்ளவும்.
• அந்த மூலப்பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
• அதனை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு உங்கள் சருமத்தை கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் தேன் சேர்ப்பது:
•4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்து, அத்துடன் 1 டீ ஸ்பூன் தேனையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
•அதனை உங்கள் முகத்தில் தடவி, அதன்பின்னர் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கு நீரில் கழுவ வேண்டும்.
•இதனை உங்கள் சருமத்தின் மெல்லிய ஈரப்பதம் கிடைக்கும் வரை பின்பற்ற வேண்டும்.

குருதி நெல்லியுடன் அர்கன் எண்ணெய் சேர்ப்பு:
• 6 முதல் 7 குருதி நெல்லிவரை எடுத்துக்கொண்டு கலவையாக்கி கொள்ள வேண்டும்.
• அந்த கிடைக்கும் இறுதி பேஸ்டுடன் 1 டீ ஸ்பூன் அர்கன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
• அதனை கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அமைதியாக அமர்ந்திருக்க, அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் அலோ வேரா ஜெல் சேர்ப்பு:
• 4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்துக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் அலோ வேரா ஜெல்லை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
• அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்.
• 20 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் பாதாம் கொட்டை பவுடர்:
• சுத்தமான 4 முதல் 5 குருதி நெல்லியை எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பாதாம் கொட்டை பவுடரை சேர்த்து பிசைந்துக்கொள்ள வேண்டும்.
• அதனை உங்கள் முக சருமத்தில் தடவி படர செய்ய, அதன் பின்னர் 10 நிமிடம் கழித்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.
• உங்கள் சருமம் உலர்ந்து இருக்கிறதா? என தட்டி பார்த்து லேசான நிறமியை (Toner) பூச வேண்டும்.

குருதி நெல்லியுடன் தயிர் மற்றும் வைட்டமின் E எண்ணெய் சேர்ப்பு:
• வைட்டமின் E மாத்திரையில் இருக்கும் எண்ணெய்யை பிழிந்து எடுத்துக்கொண்டு, அத்துடன் 4 முதல் 5 குருதி நெல்லியை நசுக்கி பிழிந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
• அந்த பிசையப்பட்ட மூலப்பொருள் கலவையை எடுத்து முகத்தின் சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும்.
• 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, அந்த கழிவை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் பால் சேர்ப்பு:
• ஒரு பாத்திரத்தில் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியை எடுத்து நசுக்கிக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் பாலையும் சேர்க்க வேண்டும்.
• அந்த கலவைக்கொண்டு முகத்தில் தடவ வேண்டும்.
• அதன்பின்னர் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் லெமன் சாறு சேர்ப்பு:
• குருதி நெல்லியை மசித்துக்கொண்டு 1 டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பிரெஷ்ஷான லெமன் சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
• அந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
• அதன்பின்னர் உங்கள் சருமத்தை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.

குருதி நெல்லியுடன் தேங்காய் எண்ணெய் கலப்பு:
• 7 முதல் 8 குருதி நெல்லியை எடுத்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
• அத்துடன் 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
• அந்த கலவையை முகத்திடல் தடவி, 10 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
• அதன்பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) பயன்படுத்தி, சருமத்திலிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

குருதி நெல்லியுடன் வெண்ணெய் (அவாகடோ) மற்றும் ரோஸ் வாட்டர் சேர்ப்பு:
• பழுத்த வெண்ணெய்யை மசித்துக்கொண்டு, அத்துடன் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியையும் சேர்க்க வேண்டும்.
• அதோடு 2 டீ ஸ்பூன்கள் ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும்.
• அந்த கலவைக்கொண்டு சருமத்தை தடவி, 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
• அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு முகத்தை கழுவி, பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications











