Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் அற்புத மாஸ்க்...
முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் அற்புத ஈஸ்ட் மாஸ்க் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் மட்டும் குறைவதில்லை. வெயில் கொளுத்துவதால், வெளியே சிறிது நேரம் சுற்றி விட்டு வந்தாலும், முகம் கருப்பாகி விடுகிறது. மேலும் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, இளமையிலேயே முகத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் வந்துவிடுகின்றன.

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தான் மார்கெட்டில் விற்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அதனால் நன்மைகளுடன், பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
சரி, இப்போது முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் அற்புத ஈஸ்ட் மாஸ்க் பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள்:
ஈஸ்ட் பவுடர் - 20 கிராம்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் பவுடரை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத்திரத்தினுள் பௌலை 2-3 நிமிடம் வைத்து எடுத்தால், மாஸ்க் ரெடி!

பயன்படுத்தும் முறை:
* முதலில் முகத்தை பால் கொண்டு துடைத்து, 5 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த காட்டன் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* பின் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

நன்மைகள்
இந்த மாஸ்க்கை போடுவதால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் நீங்குவதுடன், சருமத்தில் கொலாஜென் உற்பத்தி அதிகரித்து, சருமம் பிரகாசமாக இருக்கும்.

குறிப்பு
இந்த ஃபேஸ் மாஸ்க்கை தினமும் முகத்திற்குப் போடக்கூடாது. வாரத்திற்கு 1-2 முறை தான் போட வேண்டும். மேலும் ஈஸ்ட் சருமத்திற்கு மட்டும் நல்லதல்ல, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக தலைமுடி உதிரும் பிரச்சனையை இது தடுக்கும்.



Click it and Unblock the Notifications











