Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!
கருவளையம் வந்தால் அவ்வளவு எளிதல்ல உடனே மறைவது என்பது. காரணம் மிக மெல்லிய திசுக்கள் கண்களைச் சுற்றிலும் அமைந்துள்ளது. அவைகளில் போதிய அளவு ரத்த ஓட்டம் இல்லையென்றால் இறந்த செல்கள் தங்கி கருவளையம் ஏற்படுத்திவிடும்.
இந்த கருவளையம் நமக்கு வயதான தோற்றத்தை வேறு அளித்துவிடும். மெக்கப்பை கொண்டு மறைத்தாலும் , உபயோகித்த கெமிக்கல்களால் கூடுதல் விளைவுகள் ஏற்படும்.

முதலில் நன்றாக தூங்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துங்கள். போதிய அளவு பயிற்சிகள் தந்தால் மிக வேகமாக கருவளையம் மறைந்துவிடும்.
அது தவிர்த்து சில எளிய அழகுக் குறிப்புகளாலும் கருவளையத்தை போக்கிவிடலாம். நீங்கள் வெள்ளரிக்காயை கருவளையத்திற்கு உபயோகிப்பது பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளரிக்காயிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இறந்த செல்கள் மீது செயல் புரியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். முக்கியமாக குளிர்ச்சி தரும்.
கண்களில் உண்டாகும் அதிகப்படியான சூட்டினால் கூட கருவளையம் தோன்றும். அதேபோல் எலுமிச்சை கருமையை போக்கும். சுருக்கங்களை நீக்கும். இவ்விரண்டையும் வைத்து எப்படி கருவளையத்தை மறையச் செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை :
வெள்ளரிக்காய் - 2 துண்டுகள்
எலுமிச்சை சாறு - அரை மூடி
வெள்ளரிக்காயை துருவி அதனுடன் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். பின்னர் இதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும். குளிர்ந்த பிறகு வெளியிலெடுத்து, சாறினை பிழிந்து கொள்ளுங்கள். இந்த சாற்றினை கண்களுக்கு அடியில் தடவிக் கொள்ள வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். மீதமுள்ள சாற்றினை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். கண்கள் மிகச் சோர்வாக இருக்கும் சமயத்திலெல்லாம் சில்லென்று கண்களை சுற்று தடவிக் கொள்ளலாம். இவ்வாறு தினமும் இரு வேளை செய்து பாருங்கள். பிறகு ரிசல்ட்டை பாருங்கள்.



Click it and Unblock the Notifications














