Just In
- 11 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 51 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி?
கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை போன்றவைகளால் வரக்கூடும்.
கருவளையங்களைப் போக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதால், கருவளையங்கள் நீங்குவதோடு கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களும் நீங்கும்.
சரி, இப்போது கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.
முல்தானி மெட்டி மற்றும் வெள்ளரிக்காய் சாறு
முல்தானி மெட்டி பொடியை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.
முல்தானி மெட்டி மற்றும் பாதாம்
முல்தானி மெட்டி பொடியுடன், பாதாம் பொடி மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ, முகம் மற்றும் கண்கள் பொலிவுறும்.
முல்தானி மெட்டி மற்றும் பால்
பால் ஈரப்பசையை அதிகரித்து, திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முல்தானி மெட்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை முல்தானி மெட்டி பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.
முல்தானி மெட்டி மற்றும் தயிர்
முல்தானி மெட்டியுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, சோர்வடைந்த கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருமையும் அகலும்.
முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை
சருமத்தில் உள்ள கருமையை எலுமிச்சை மிகவும் எளிதில் நீக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்யும். எனவே முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, கருவளையம் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் அகலும்.
முல்தானி மெட்டி மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, முல்தானி மெட்டி பொடியுன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருவளையங்கள் விரைவில் மறையும்.