Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
கற்றாழை சோப் எப்படி செய்வது என தெரியுமா? படிப்படியான ஈஸி வழிகள்
கற்றாழை அல்லது ஆலோவேரா ஒரு அருமையான அழகுச் சாதனப் பொருள்களில் பயன்படும் உட்பொருள். இதனைக் கொண்டு வீட்டிலேயே சோப்பை எப்படி செய்வது என்பதை படிப்படியாக விளக்கும் குறிப்பு இதோ உங்களுக்காக.
கற்றாழை பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. உங்களுக்கு சருமப் பிரச்சனை இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முதலில் பயன்படுத்திப்பாருங்கள். அப்படி சரியாக வில்லையென்றால் நீங்கள் வேறு மாற்றுக்களைத் தேடலாம்.
இது சரும வியாதிகளையும் குணப்படுத்தும் என்பதால் இதனை சோப்பாக பயனபடுத்தினால் பல அருமையான பலன்களை உங்களுக்கு தரும்.

இந்த சோப் நல்ல ஈரப்பதத்தை தந்து வறண்டுபோகாமல் பாதுகாக்கும். இது மிகவும் மென்மையான ஒன்று என்பதால் சற்றே உணர்வு அதிகம் உள்ள மென்மையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.

செய்முறை :
1 . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொத்திக்க வைக்கவும்.

செய்முறை :
அதில் சில தேக்கரண்டி காஸ்டிக் சோடாவை சேர்க்கவும். அதை நன்கு ஒரு மர கரண்டி கொண்டு கலக்கவும் இதனால் அது கடினமாக அல்லது கெட்டியாக மாறாமல் இருக்கும்.

செய்முறை :
2. கற்றாழை இலைகளில் இருந்து உள்ளே உள்ள கூழை பிரித்தெடுங்கள்

செய்முறை :
3. பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். இது சோப்பிற்கு ஈரப்பத்தத்தைத் தரும். இதை பயன்படுத்தினால் உங்கள் சருமம் ஒருபோதும் வறண்டுபோகாது.

செய்முறை :
4. பின்னர் கற்றாழை இலையில் இருந்து எடுத்த கூழை சேர்க்கவும். இதில் முக்கியாமாகச் செய்யவேண்டிய ஒன்று கிளறிக்கொண்டேயிருப்பதுதான். ஏனென்றால் அதை அச்சில் வார்க்கும் முன் கெட்டியாக விடக்கூடாது.

செய்முறை :
5. இந்தக் கலவையில் வாசனை எண்ணையை சேர்க்கவும் (எசன்ஷியல் ஆயில்). தாழம்பூ நறுமணம் நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று என்பதால் மூன்று அல்லது நான்கு துளிகள் கூட தாழம்பூ எண்ணெய்யை அதில் விடவும்.

செய்முறை :
6. நன்கு கிளறியபிறகு இந்த கலவையை அச்சுக்களில் வார்த்து ஐந்து மணி நேரம் கழித்து பிரிட்ஜில் டீப் பிரீஸ் பகுதியில் வைக்கவும்.

செய்முறை :
7. இரவுமுழுவதும் அப்படியே விட்டு காலையில் எடுத்தால் உங்கள் இயற்கையான நீங்களே செய்த கற்றாழை சோப் தயார்.
என்ன ட்ரை பண்ணுவீங்களா?



Click it and Unblock the Notifications











