Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தென்னிந்திய பெண்களின் அழகைப் பாதுகாக்கும் மஞ்சளின் அழகு நன்மைகள்!!!
தென்னிந்திய பெண்களின் அழகிற்கு காரணமான மஞ்சளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மஞ்சள் சமையலில் மட்டுமின்றி, அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் தான், அவர்களின் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருந்தது.
ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தால், ஆடைகளில் சாயம் ஒட்டிக் கொள்ளும் என்று பல பெண்களும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதை நிறுத்திவிட்டனர். அதுமட்டுமின்றி, தற்போது சூரியனின் புறஊதாக்கதிர்கள் நேரடியாக நம் சருமத்தை தாக்குவதால், மஞ்சளை தேய்த்துக் குளித்து வந்தால், சருமம் கருமையாகும். ஆகவே வெயிலில் அதிகம் செல்பவர்கள், அதனை அன்றாடம் தேய்த்துக் குளிக்காமல், அவ்வப்போது அதனைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் ஏதேனும் போட்டு வந்தாலே, சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். சரி, இப்போது சருமத்திற்கு மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போமா!!!

பருக்களை போக்க...
மஞ்சள் தூளுடன், சந்தன பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், பருக்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஸ்கரப்
மஞ்சள் தூளுடன் 2 துளிகள் கடுகு எண்ணெய் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

கரும்புள்ளிகளை நீக்க...
மஞ்சள் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து ஸ்கரப் செய்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

சரும சுருக்கம்
மஞ்சள் பொடியை மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சரும சருக்கம் மறையும்.

பொலிவான சருமம்
தினமும் குளிக்கும் முன், மஞ்சள் தூளில் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் தேய்த்து குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

குதிகால் வெடிப்பு
மஞ்சள் தூளை தேங்காய் எணணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, குதிகாலில் குளிக்கும் முன் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கும்.

அழகாக சருமம்
அழகாக ஜொலிக்க நினைத்தால், மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, குளிக்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.

நல்ல கிருமிநாசினி
வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை உடல் முழுவதும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து, உடல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications