Latest Updates
-
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!

கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சளுக்கு முடி வளர்ச்சியை குறைக்கும் தன்மை உண்டு. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் கஸ்தூரி மஞ்சளை வாங்கி அதனுடன் பாசிப்பயறு சேர்ந்து இரண்டையும் வெளியில் காயவைத்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். தினசரி குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் இந்த பவுடரை போட்டு கழுவவும். உடனடியாக பலன் தராது. ஆனால் நாளடைவில் முடியை உதிரச்செய்து ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. முகமும் அழகாவதோடு சருமமும் பாதுகாக்கப்படும்.
வேப்பிலை, மஞ்சள்
முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்து பூசினாலும் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
பாசிப் பயறு, மஞ்சள்
பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது.
சர்க்கரை கரைசல்
2 கப் சர்க்கரையில், கால் கப் எலுமிச்சை சாறு ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை அகலமான பாத்திரத்தில் போட்டு மிதமாக சூடுபடுத்தவும். லேசாக நுரைகள் வந்த உடன் இறக்கிவைத்து லேசாக குளிர வைக்கவும்.
கைகளை நன்றாக கழுவிய பின்னர் இந்த கலவையை எடுத்து முகத்தில் ரோமம் உள்ள பகுதிகளில் நன்றாக திக்காக அப்ளை செய்யவும். (தோல் பொசுங்கிவிடும் என்ற அச்சம் வேண்டாம்) பின்னர் உலர்ந்த பின்னர் காட்டன் துணி கொண்டு அவற்றை துடைத்து எடுக்கவும். தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். முகமும் பொலிவடையும்.



Click it and Unblock the Notifications