Just In
- 9 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 12 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 3 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
Don't Miss
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
க்ரீம் மசாஜ் பண்றீங்களா? சருமத்திற்கு ரொம்ப நல்லதாம்!!!
நிறைய பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்திற்கு க்ரீம் மசாஜ் செய்வார்கள். ஏனெனில் அந்த மசாஜில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த மசாஜை நாமாக செய்வதை விட, மற்றவர்கள் செய்துவிட்டால் தான், நன்றாக இருக்கும். அதிலும் அவ்வாறு ஃபேஷியல் க்ரீம் மசாஜை பெண்கள் மட்டும் செய்யாமல், ஆண்களும் செய்கின்றனர். அப்படி அந்த மசாஜில் என்ன நன்மை தான் இருக்கிறதென்று கேட்கிறீர்களா? சரி, அது என்ன நன்மையென்று இப்போது பார்ப்போமா!!!
ஈரப்பசை- க்ரீமை வைத்து மசாஜ் செய்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல், சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் க்ரீமை வைத்து செய்யும் போது குறைந்தது 10-15 நிமிடம் மசாஜ் செய்வதால், சரும செல்கள் அனைத்தும் நன்கு ஈரப்பசை அல்லது எண்ணெய் பசையை அடைகின்றன. மேலும் நீண்ட நேரம் மசாஜ் செய்வதால், சருமத்தில் உள்ள பல லேயர்களிலும் அந்த ஈரப்பசை ஊடுருவி, நீண்ட நாட்கள் சருமம் நன்கு மென்மையோடு இருக்கின்றன.
சுருக்கங்கள்- சருமத்திற்கு மசாஜ் செய்வதால், சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்குகின்றன. அதாவது ஃபேஷியல் க்ரீமை வைத்து மசாஜ் செய்வதால், சருமம் தளர்ந்து இருப்பது இறுக்கடைந்து, ஒரு இளமைத் தோற்றத்தை தருகின்றன. அதனால் தான் நிறைய அழகு நிபுணர்கள், 25-27 வயதிற்கு மேல் ஆனவர்கள் மாதத்திற்கு ஒருமுறை க்ரீம் மசாஜை செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர்.
அழகு- அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்தால், அனைத்து நிலையங்களிலும் இறுதியில் ஒரு க்ரீமை வைத்து மசாஜ் போன்று செய்வார்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால், சருமம் சற்று அழகாக பட்டுப் போன்று பொலிவோடு காணப்படும் என்பதால் தான். மேலும் அந்த க்ரீம் சரும செல்களை மென்மையாக்குகின்றன. ஆகவே அதனால் கூடுதல் அழகு கிடைக்கும்.
சீரான இரத்த ஓட்டம்- சாதாரணமாக மசாஜ் செய்தாலே உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிலும் முகம் நன்கு பொலிவோடு இருக்க க்ரீமை வைத்து மகாஜ் செய்தால், முகத்திலும் சரியாக இரத்த ஓட்டம் அமைவதோடு, பிம்பிள் நீங்கி, சருமம் மிகவும் புத்துணர்ச்சியோடு அழகாக காணப்படும்.
அழகான கன்னம்- முகத்திற்கு க்ரீமை வைத்து மசாஜ் செய்தால், கன்னங்கள் நன்கு அழகாக கொலுகொலுவென்று இருக்கும். ஏனென்றால் மசாஜ் செய்யும் போது, கிரீமை வைத்து நன்கு இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுழற்றி மசாஜ் செய்வதால், கன்னங்களில் உள்ள எலும்புகள் நன்கு வடிவத்தை பெறுகின்றன. அதனால் கன்னங்களும் கொலுகொலுவென்று அழகாக மாறுகின்றன.
ஆகவே மாதத்திற்கு ஒரு முறை முகத்திற்கு க்ரீமை வைத்து மசாஜ் செய்யுங்கள், பொலிவோடு அழகாக மின்னுங்கள்.