Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
கறிவேப்பிலையை இந்த 4 வழிகளில் யூஸ் பண்ணா... ஆச்சரியப்படும் அளவுக்கு உங்க முடி நீளமா வளருமாம்!
தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு நன்கு பலனளிக்கிறது. ஏனெனில் அதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன.
ஆண், பெண் என அனைவரும் அடர்த்தியான பளபளப்பான தலைமுடியை மிகவும் விரும்புவார்கள். ஆனால், எல்லாரும் எதிர்பார்ப்பதுபோல, அவர்களுக்கு முடி அமைவதில்லை. ஏனெனில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தலைமுடி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுக் கலாசாரத்தால், நம் தலைமுடி மிகவும் பாதிக்கப்படுகிறது. அழகு உள்ளிருந்து வந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் சில செயற்கை தயாரிப்புகளும் உங்கள் தலைமுடியை மோசமாக பாதிக்கும். நீங்கள் விரும்பியது போல, முடியை பெற சில இயற்கை முறை வழிகள் உள்ளன. சில இயற்கையான பொருட்கள் உங்கள் முடிக்கு பல அதிசயங்களை செய்கிறது.

உங்கள் சீப்பில் அல்லது குளிக்கும் போது அதிகமான முடியை நீங்கள் கண்டால், கறிவேப்பிலையால் ஏற்பட்ட சேதத்தை மாற்றியமைத்து, அடர்த்தியான முடியை நீங்கள் பெறலாம். பளபளப்பான, நீளமான மற்றும் பெரிய கூந்தலுக்கு கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதற்கான வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கறிவேப்பிலை ஏன் தலைமுடிக்கு சிறந்தது?
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த கறிவேப்பிலை உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. முடி உதிர்வை எதிர்த்துப் போராடுவது முதல் பொடுகு மற்றும் அரிப்பு உச்சந்தலையில் இருந்து விடுபடுவது வரை, கறிவேப்பிலையால் செய்ய முடியாதது எதுவுமில்லை.

நரை முடியை தடுக்கும்
முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் வைட்டமின் பி இதில் அதிகளவில் உள்ளது. உங்களுக்கு இளநிறை பிரச்சனை இருந்தால், மறக்காமல் உங்கள் முடி பராமரிப்பில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய பலன்கள் நிறைந்த கறிவேப்பிலையைப் பயன்படுத்தி அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீண்ட கூந்தலைப் பெற முயற்சி செய்யுங்கள்.

கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்
உங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்பினால், இந்த வைத்தியம் உங்களுக்கானது. அரை கப் கறிவேப்பிலை, வெந்தய இலை மற்றும் ஒரு நெல்லிக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். குளிர்ந்த நீரில் கழுவுவதற்கு முன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். சிறிது நாட்களில் உங்கள் முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

தேங்காய் மற்றும் கறிவேப்பிலை
குறைந்த தீயில் கடாயை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். இந்த கலவையை ஆறவைத்து, உள்ளடக்கங்களை ஹேர் ஆயில் டிஸ்பென்சர் பாட்டிலில் வடிகட்டவும். அடிக்கடி அல்லது வாரத்திற்கு ஒரு முறை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியை எதிர்பார்க்கும் ஒருவருக்கும் இந்த தீர்வு சிறந்தது. தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு நன்கு பலனளிக்கிறது. ஏனெனில் அதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன.

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
இன்றைய நாட்களில் 10ல் 7 பெண்கள் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த வைத்தியம் உங்கள் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும். வெங்காயச் சாற்றில் நல்ல அளவு கந்தகச் சத்து உள்ளது. இது முடியின் மேற்புறத்தை வலுவாக்கும். கறிவேப்பிலை உங்கள் முடியின் வேர்களை மென்மையாக்கும் போது ஊட்டச்சத்தை அளிக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு மஸ்லின் துணி மூலம் கரைசலை வடிகட்டவும். ஒரு பருத்தி பந்தை அதில் நனைத்து, உங்கள் முடியின் வேர்களில் தடவவும். அதைக் கழுவுவதற்கு முன் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். வெங்காயத்தில் இருந்து எஞ்சிய வாசனையைத் தடுக்க ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்.

தயிர் மற்றும் கறிவேப்பிலை
உங்கள் தலைமுடிக்கு கண்மூடித்தனமான பிரகாசம் வேண்டுமா? இந்த டை க்ளென்சர் உங்கள் முடிக்கு அந்த செயலைச் செய்யும். தயிர் முடிக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு ஆகியவற்றை மெதுவாக அகற்ற உதவுகிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் கலக்கவும். பேஸ்டாக அரைத்து, அதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். கழுவுவதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். பின்னர், லேசான ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசவும்.



Click it and Unblock the Notifications