Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 4 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேன் தொல்லை தாங்க முடியலையா? அப்ப இந்த 5 விஷயங்கள ட்ரை பண்ணுங்க... ஒரு பேன் கூட இருக்காது!
உங்கள் தலைமுடியில் உள்ள பேன்களை எவ்வாறு அகற்றுவது என்று நீங்கள் தேடுகிறீர்களானால், எண்ணெயின் சக்தியை நம்புங்கள். இதைச் செய்ய, தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு தடவ வேண்டும்.
தலைமுடி கொட்டுவது, முடி நரைப்பது மற்றும் முடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு முடி பிரச்சனைகளை நாம் தினமும் சந்தித்து வருகிறோம். அதேபோல, பருவ மாற்றத்தின் போது உங்கள் அல்லது உங்கள் குழந்தையின் தலைமுடியில் பேன்கள் வருவது பொதுவானது. சில பூஞ்சை தொற்று காரணமாக பேன் ஏற்படலாம் அல்லது மற்றொரு நபரிடம் இருந்து பரவும் வாய்ப்பு அதிகம். பேன் தொல்லை உங்களை வாட்டி வதைக்கிறதா? எப்போதும் உங்கள் தலையில் அரிப்பையும்,முடியின் மேல் ஓடிக்கொண்டும் பார்க்க அசெளகாரியமாக இருக்கிறதா? நீங்க என்ன பண்ணாலும் பேன் உங்கள் முடியை விட்டு போகலையா? கவலை வேண்டாம். முடி பேன்களை அகற்ற எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்.
வீட்டிலேயே இயற்கையான வழிகளில் உங்கள் தலைமுடியில் உள்ள பேன்களை எவ்வாறு அகற்றுவது மற்றும் உங்கள் தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான இயற்கை வழிகளை இக்கட்டுரையில் காணலாம்.
ஈரமான முடியை சீவக்கூடாது
ஈரமாக இருக்கும்போது உங்கள் தலைமுடியை சீப்பால் சீவ வேண்டாம் என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இங்கே நிலைமை வேறுபடும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பேன்களால் விரைவாக நகர முடியாது. எனவே மெல்லிய பல் கொண்ட சீப்பை எடுத்து, உங்கள் தலைமுடியை மிகச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது மூன்று முறை சீப்பால் சீவவும். இந்த பாரம்பரிய முறை செய்ய நேரம் அதிகம் எடுக்கும். ஆனால், இது சிறந்த முடி பேன் சிகிச்சைகளில் ஒன்றாகும். இது இயற்கையான முறையில் முடியிலிருந்து பேன்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
எண்ணெய் முடி சீவுதல்
உங்கள் தலைமுடியில் உள்ள பேன்களை எவ்வாறு அகற்றுவது என்று நீங்கள் தேடுகிறீர்களானால், எண்ணெயின் சக்தியை நம்புங்கள். இதைச் செய்ய, தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு தடவ வேண்டும். உங்கள் தலைமுடியை சிறிய பகுதிகளாகப் பிரித்து, அதன் மேல் மெல்லிய பல் கொண்ட சீப்பால் சீவ வேண்டும். ஏனெனில், உங்கள் தலைமுடி எண்ணெய் நிறைந்ததாக இருக்கும்போது பேன்கள் நகர்த்துவது மிகவும் கடினம் மற்றும் சீப்பில் எளிதில் சிக்கிக்கொள்ளும்.
மாற்று வழி
உங்கள் தலைமுடிக்கு நல்ல அளவு எண்ணெய் தடவுவது உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், உங்கள் சீப்பில் எண்ணெய் தடவி, பின்னர் அதை உங்கள் தலைமுடிக்கு மேல் தடவவும். தேவைக்கேற்ப எண்ணெயை மீண்டும் தடவலாம். இந்த செயல்முறையிலும் பேன்கள் எளிதில் சிக்கிக்கொள்ளும். இதற்குப் பிறகு உங்கள் தலைமுடியை நன்கு கழுவி உலர வைக்கவும். பிறகு உங்கள் துண்டு மற்றும் சீப்பைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தலைமுடியை உலர்த்த நீங்கள் துண்டை பயன்படுத்தினால், அதிலும் பேன்கள் இருக்கலாம்.
அத்தியாவசிய எண்ணெய் சிகிச்சை
முடி பேன் சிகிச்சைக்கு பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முடி பேன்களை அகற்ற நீங்கள் முயற்சி செய்யக்கூடிய எண்ணெய்கள் தேயிலை மரம், லாவெண்டர், வேம்பு, புதினா மற்றும் ஜாதிக்காய். அத்தியாவசிய எண்ணெயை உங்கள் தலைமுடிக்கு நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்பொழுதும் கேரியர் ஆயில் அல்லது வெஜிடபிள் ஆயிலுடன் கலந்து பயன்படுத்தவும். மேலே குறிப்பிட்டுள்ள அத்தியாவசிய எண்ணெயில் 15-20 துளிகளுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, பருத்திப் பந்தைப் பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையில் தடவவும். இது உங்கள் தலைமுடியில் உள்ள பேன்களை முற்றிலும் அகற்ற உதவுகிறது.
வினிகர் மற்றும் தண்ணீர்
ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீங்கள் பேன்களால் பாதிக்கப்பட்டிருந்தால், இது சிறந்த தீர்வுகளில் ஒன்றாக இருக்கலாம். 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை அரை கப் தண்ணீரில் கலந்து, பருத்தி உருண்டையால் உங்கள் உச்சந்தலையில் தடவவும். குறைந்தது அரை மணி நேரம் ஓய்வெடுக்கவும், பின்னர் உங்கள் தலைமுடியை நன்றாக சிறிய பல் கொண்ட சீப்பால் சீவ வேண்டும். இதில், எல்லா பேன்களும் உங்கள் முடியை விட்டு அகற்றலாம்.