Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
முடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சீக்கிரம் சொட்டை ஆகலாம்!
முடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சொட்டை ஆகலாம்
முடியை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. காலையில் தலைக்கு குளித்து, முடியை ஸ்டைலிஷ் செய்து பின்னர் தலைவாரிக்கொள்கின்றோம். மேலும் இரவு நேரத்தில் தலைமுடியை அவிழ்த்து ஒரு பேண்ட் போட்டுக்கொள்வது அனைவரும் செய்யும் ஒன்று தான். அதே சமயம் நாம் செய்யும் தினசரி நடவடிக்கைகள் மற்றும் ஹேர் ஸ்டைலிஷ் விசயங்கள் முடியை தொல்லை செய்யாதவாறு இருக்க வேண்டியது அவசியம்.

வேர்ப்பகுதிகள்
தினமும் குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடுகின்றன. இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நீண்ட நேரம் தலை சீவுதல்
நீண்ட நேரம் தலைசீவிக் கொண்டே இருப்பது தவறான ஒன்றாகும். இதனால் தலைமுடி உடைவதற்கும், முடியின் வேர்க்கால்கள் வழுவிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இறுக்கமாக இருப்பது
குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால், முடியானது இறுக்கிப்பிடிக்கப்படுகிறது. இதே போல் தொடர்ச்சியான இறுக்கம் இருந்தால், முடி உதிர்வதற்கு அதிமான வாய்ப்புகள் உள்ளது.

வழுக்கை
குதிரை வால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடி மிகவும் இறுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேல் நோக்கி சீவுவதால், முடி அதிகமாக உதிர்கிறது. இதனால் முடி படிப்படியாக பின் நோக்கி சென்று கொண்டே இருப்பதால் முன் வழுக்கையும் உண்டாகிறது.

ஈரத்தலையுடன் தலைசீவுதல்
தலைக்கு குளித்துவிட்டு வந்த உடன் தலைசீவுவது கூடாது. ஏனெனில் நீர்பட்டதும், தலைமுடியானது வழுவிழந்து காணப்படும். அந்த நேரத்தில் தலைசீவினால், முடி அதிகமாக உதிரும்.



Click it and Unblock the Notifications