Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
முடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சீக்கிரம் சொட்டை ஆகலாம்!
முடியை மேல் நோக்கி சீவுவதால் நீங்கள் சொட்டை ஆகலாம்
முடியை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. காலையில் தலைக்கு குளித்து, முடியை ஸ்டைலிஷ் செய்து பின்னர் தலைவாரிக்கொள்கின்றோம். மேலும் இரவு நேரத்தில் தலைமுடியை அவிழ்த்து ஒரு பேண்ட் போட்டுக்கொள்வது அனைவரும் செய்யும் ஒன்று தான். அதே சமயம் நாம் செய்யும் தினசரி நடவடிக்கைகள் மற்றும் ஹேர் ஸ்டைலிஷ் விசயங்கள் முடியை தொல்லை செய்யாதவாறு இருக்க வேண்டியது அவசியம்.

வேர்ப்பகுதிகள்
தினமும் குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்துவிடுகின்றன. இதனால் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நீண்ட நேரம் தலை சீவுதல்
நீண்ட நேரம் தலைசீவிக் கொண்டே இருப்பது தவறான ஒன்றாகும். இதனால் தலைமுடி உடைவதற்கும், முடியின் வேர்க்கால்கள் வழுவிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இறுக்கமாக இருப்பது
குதிரைவால் ஹேர் ஸ்டைல் செய்வதால், முடியானது இறுக்கிப்பிடிக்கப்படுகிறது. இதே போல் தொடர்ச்சியான இறுக்கம் இருந்தால், முடி உதிர்வதற்கு அதிமான வாய்ப்புகள் உள்ளது.

வழுக்கை
குதிரை வால் ஹேர் ஸ்டைல் செய்வதால் முடி மிகவும் இறுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேல் நோக்கி சீவுவதால், முடி அதிகமாக உதிர்கிறது. இதனால் முடி படிப்படியாக பின் நோக்கி சென்று கொண்டே இருப்பதால் முன் வழுக்கையும் உண்டாகிறது.

ஈரத்தலையுடன் தலைசீவுதல்
தலைக்கு குளித்துவிட்டு வந்த உடன் தலைசீவுவது கூடாது. ஏனெனில் நீர்பட்டதும், தலைமுடியானது வழுவிழந்து காணப்படும். அந்த நேரத்தில் தலைசீவினால், முடி அதிகமாக உதிரும்.



Click it and Unblock the Notifications