Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுத்து நிறுத்தும் ஓர் அற்புத வழி!
தலைக்கு தினமும் எண்ணெயைப் பயன்படுத்தினாலே, தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஓர் அற்புத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் தலைமுடி உதிர்வதால் தினந்தோறும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைமுடி உதிர்வதற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் மயிர்கால்கள் பலவீனமாக இருப்பது முதன்மையான காரணம். தலைமுடிக்கு போதிய ஊட்டச்சத்துக்களை எண்ணெய்கள் வழங்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் தினமும் தலைக்கு எண்ணெய் தடவுகிறோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

தலைக்கு தினமும் நல்ல சத்துக்கள் நிறைந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலே, தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஓர் அற்புத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தயாரித்துப் பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
செம்பருத்திப் பூ மற்றும் இலைகள்
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்

செய்முறை #1
முதலில் செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சரிசம அளவில் எடுத்து, ஒரு பாட்டிலில் ஒன்றாக ஊற்றிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு அரைத்து வைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் இலைகளை எண்ணெயுடன் சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
மறுநாள் காலையில் சிறிது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி நீரில் அலச வேண்டும்.

நன்மை
இந்த எண்ணெய் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











