Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
இங்கு நரைமுடியைக் கருமையாக்கும் எலுமிச்சை தேங்காய் எண்ணெய் கலவை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளில் ஒன்று தான் நரைமுடி. இளமையிலேயே நரை முடி வருவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டு, மோசமான உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, கலரிங், கெமிக்கல்கள், கதிர்வீச்சுக்கள், மரபணு பிரச்சனைகள் போன்றவை காரணங்களாக உள்ளன.

இதனால் தலைமுடி நரைப்பதுடன், பொலிவிழந்தும், வறட்சியுடனும் காணப்படுகிறது. இப்படி நரைத்து முதுமைத் தோற்றத்தைத் தரும் தலைமுடியை மீண்டும் கருமையாக்க ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் தலைமுடியின் நிறம் கருமையாவதோடு, முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

எலுமிச்சை தேங்காய் கலவை
இந்த கலவையில் லாரிக் அமிலம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும். மேலும் இதில் உள்ள நடுத்தர சங்கிலி அமிலங்கள், முடியை வலிமையாக்குவதுடன், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும், முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை:
ஒரு பௌலில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
தயாரித்து வைத்துள்ள எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

குறிப்பு
இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நாளடைவில் தலையில் உள்ள நரைமுடி கருமையாக ஆரம்பிக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.



Click it and Unblock the Notifications