Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?
பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லது. அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இது முடிவளர்ச்சிக்கும் பயன்படுகிறது. பூண்டு எண்ணெய் பூண்டிலிருந்து பெறப்படுவதல்ல. பூண்டுடன் பல எண்ணெகள் கலந்து தயாரிக்கப்படுகிறது.
பூண்டில் அதிக அளவு காப்பர் மற்றும் சல்ஃபர் உள்ளது. விட்டமின் சி மற்றும் இரும்புசத்து உள்ளது. இவை அனைத்தும் கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவை.
குறிப்பாக சல்ஃபர் கெரடின் உற்பத்தியை தூண்டும். ஆகவே பூண்டு உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அதனை எப்படி உபயோகப்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி அதிகமாகும். சாப்பிட்டாலும், மாத்திரை வடிவிலும் அதோடு, எண்ணெயாகவும் உபயோகித்தால் கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும். இன்னும் விரிவாக தொடர்ந்து படியுங்கள்.

இயற்கை பூண்டு எண்ணெய் :
பூண்டு பற்களை பொடிபொடியாக நறுக்கி அதனை ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் போட்டு 2 வாரங்கள் வைக்கவும்.
அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது நல்லது. இரு வாரங்கள் கழித்து அந்த எண்ணெயை இரவில் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். மறு நாள் தலைக்கு குளிக்கலாம். தொடர்ச்சியாக இப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

நரை முடி தடுக்க :
பூண்டு பற்களை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். சில மிளகையும் நன்றாக நுணுக்கிக் கொண்டு பூண்டுடன் சேர்த்து இர்ண்டையும் தேங்காய் எண்ணெயில் கலந்து லேசாக சூடுபடுத்தவும்.
இந்த எண்ணெயை தவறாமல் வாரம் இருமுறை உபயோகித்தால் நரைமுடி மேற்கொண்டு வளராமல் தடுக்கலாம்.

அதிக பொடுகிற்கு :
அதிக சூடு மற்றும் பொடுகி இருந்தால் பூண்டை அரைத்து அதன் சாறில் சம அளவு நீர் கலந்து தலையில் த்டவுங்கள். 5 நிமிடம் கழித்து தலையை அலசவும். இது முடி வளர்ச்சியையும் தூண்டும். பொடுகையும் கட்டுப்படுத்தும்.

பூண்டு மாத்திரை :
கடைகளில் பூண்டு மாத்திரை விற்கப்படுகிறது. அதனை பொடி செய்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புடன் கலந்து உபயோகித்தால் நல்லது. முடி உதிர்தல் நிற்கும். இந்த முறையை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதுமானது. அடிக்கடி செய்ய வேண்டாம்.



Click it and Unblock the Notifications