Latest Updates
-
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன?
அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?
கருவேப்பிலையை மிக சாதரண ஒப்பீட்டுக்கு சொல்வார்கள். ஆனால் அதன் சத்துக்களும் நன்மைகளையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. சத்துக்களும் அடங்கிய கருவேப்பிலையை நாம் மதிக்காமல் தூக்கியெறிந்துவிடுகிறோம்
கூந்தல் அடர்த்தியில்லாமல் இருக்கிறது என பல பெண்கள் கவலைப்படுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். வித விதமான என்ணெய் ஷாம்புகளை முயற்சித்திருந்தும் பலனில்லையா? இதை ட்ரை பண்ணுங்க.

கருவேப்பிலைதான் தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கூந்தல் அடர்த்தி இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இந்த முறைகளை உபயோகித்து பாருங்கள். பலனளிக்கும்.

கருவேப்பிலை மாஸ்க் :
தேவையானவை :
வெந்தயம் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு .

கருவேப்பிலை மாஸ்க் :
செய்முறை :
வெந்தயத்தையும் சீரகத்தையும் முந்தைய நாளே ஊற வைத்து விடுங்கள். மறு நாள் ஊறிய இவற்றுடன் இரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை கலந்து அரையுங்கள்.
இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசவும். வாரம் இருமுறை செய்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியபப்டுவீர்கள்.

கருவேப்பிலை எண்ணெய் :
கருவேப்பிலையை கையளவு எடுத்து சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். கடுகு அல்லது நல்லெண்ணெயை ஒரு கப் அளவு எடுத்து சுட வைக்கவும்.
அதில் கையளவு கருவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் வைக்கவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி அதனை வாரம் ஒருமுறை உபயோகித்தால் நரை முடி வராது. முடி வளர்ச்சி தூண்டும்.

யோகார்ட் மற்றும் கருவேப்பிலை :
கருவேப்பிலை பொடியுடன் யோகார்ட் கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை தரும். பொடுகு , வறட்சி பிரச்சனை ஏற்படாது.

உங்கள் டயட்டில் சேருங்கள் :
கருவேப்பிலை பொடி தயார் செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவை ஆரோக்கியம் மட்டுமல்ல கருகருவென அடர்த்தியான கூந்தலையும் விரைவில் தர உதவும்.



Click it and Unblock the Notifications