Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?
கருவேப்பிலையை மிக சாதரண ஒப்பீட்டுக்கு சொல்வார்கள். ஆனால் அதன் சத்துக்களும் நன்மைகளையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. சத்துக்களும் அடங்கிய கருவேப்பிலையை நாம் மதிக்காமல் தூக்கியெறிந்துவிடுகிறோம்
கூந்தல் அடர்த்தியில்லாமல் இருக்கிறது என பல பெண்கள் கவலைப்படுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். வித விதமான என்ணெய் ஷாம்புகளை முயற்சித்திருந்தும் பலனில்லையா? இதை ட்ரை பண்ணுங்க.

கருவேப்பிலைதான் தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கூந்தல் அடர்த்தி இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இந்த முறைகளை உபயோகித்து பாருங்கள். பலனளிக்கும்.

கருவேப்பிலை மாஸ்க் :
தேவையானவை :
வெந்தயம் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு .

கருவேப்பிலை மாஸ்க் :
செய்முறை :
வெந்தயத்தையும் சீரகத்தையும் முந்தைய நாளே ஊற வைத்து விடுங்கள். மறு நாள் ஊறிய இவற்றுடன் இரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை கலந்து அரையுங்கள்.
இதனை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசவும். வாரம் இருமுறை செய்தால் உங்கள் கூந்தல் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியபப்டுவீர்கள்.

கருவேப்பிலை எண்ணெய் :
கருவேப்பிலையை கையளவு எடுத்து சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். கடுகு அல்லது நல்லெண்ணெயை ஒரு கப் அளவு எடுத்து சுட வைக்கவும்.
அதில் கையளவு கருவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் வைக்கவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி அதனை வாரம் ஒருமுறை உபயோகித்தால் நரை முடி வராது. முடி வளர்ச்சி தூண்டும்.

யோகார்ட் மற்றும் கருவேப்பிலை :
கருவேப்பிலை பொடியுடன் யோகார்ட் கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை தரும். பொடுகு , வறட்சி பிரச்சனை ஏற்படாது.

உங்கள் டயட்டில் சேருங்கள் :
கருவேப்பிலை பொடி தயார் செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவை ஆரோக்கியம் மட்டுமல்ல கருகருவென அடர்த்தியான கூந்தலையும் விரைவில் தர உதவும்.



Click it and Unblock the Notifications