Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க
மிருதுவான கூந்தல் நமக்கே ஒரு குஷியை தரும். எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எல்லா சமயங்களிலும் நமக்கு கூந்தல் அப்படி இருக்காது.
தலைக்கு குளித்தன்று மிகவும் மிருதுவாக உணர்வீர்கள். அதன் பின் வரும் நாட்களில்? வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதுதான் நிறைய பேருக்கு ஏற்படும். எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க நாம் வாரம் ஒரு நாளாவது பராமரிப்பு தேவை.

வாரம் ஒரு நாள் இதற்கென நேரம் ஒதுக்கி செய்து பாருங்கள். பின் தலை குளித்து ஐந்து நாட்களானாலும் கூந்தல் மிருதுவாக இருக்கும். அப்படியான ஒரு அருமையாக குறிப்புதான் இது.
தேவையானவை :
கற்றாழை சதைப் பகுதி - கால் கப்
தேங்காய் எண்ணெய் - கால் கல்
தேங்காய் பால் - அரை கப் அல்லது தேவையான அளவு
கற்றாழை அதிக அமினோ அமிலங்களையும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளையும் கொண்டது. இவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, பொடுகு போன்ற தொல்லைகளிலிருந்து காக்கும்.
தேங்காய்ப் பால், கூந்தலுக்கு போஷாக்கையும், மிளிரும் கூந்த்லையும் தரும். தவிர அதில் அதிக புரதச் சத்து உள்ளது. இது ஸ்கால்ப்பை ஊடுருவி, மயிர்க்கால்களை வளரச் செய்யும்.
கற்றாழையின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பால் கலந்து முடிகளின் ஸ்கால்ப்பில் தடவுங்கள். பிறகு நுனி வரை தடவவும்.
இவை உடல் முழுவதும் ஒழுகாமல் இருக்க தலையை ஷவர் கேப் கொண்டு மூடிடுங்கள். அரை மணி நேரம் கழித்து நல்ல தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு கூந்தல் அலசுங்கள். அந்த வாரம் முழுவதும் கூந்தம் மிருதுவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications



