Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க
மிருதுவான கூந்தல் நமக்கே ஒரு குஷியை தரும். எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எல்லா சமயங்களிலும் நமக்கு கூந்தல் அப்படி இருக்காது.
தலைக்கு குளித்தன்று மிகவும் மிருதுவாக உணர்வீர்கள். அதன் பின் வரும் நாட்களில்? வறண்டு கரடுமுரடாக இருக்கும். இதுதான் நிறைய பேருக்கு ஏற்படும். எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க நாம் வாரம் ஒரு நாளாவது பராமரிப்பு தேவை.

வாரம் ஒரு நாள் இதற்கென நேரம் ஒதுக்கி செய்து பாருங்கள். பின் தலை குளித்து ஐந்து நாட்களானாலும் கூந்தல் மிருதுவாக இருக்கும். அப்படியான ஒரு அருமையாக குறிப்புதான் இது.
தேவையானவை :
கற்றாழை சதைப் பகுதி - கால் கப்
தேங்காய் எண்ணெய் - கால் கல்
தேங்காய் பால் - அரை கப் அல்லது தேவையான அளவு
கற்றாழை அதிக அமினோ அமிலங்களையும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளையும் கொண்டது. இவை கூந்தல் வளர்ச்சியை தூண்டும். தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, பொடுகு போன்ற தொல்லைகளிலிருந்து காக்கும்.
தேங்காய்ப் பால், கூந்தலுக்கு போஷாக்கையும், மிளிரும் கூந்த்லையும் தரும். தவிர அதில் அதிக புரதச் சத்து உள்ளது. இது ஸ்கால்ப்பை ஊடுருவி, மயிர்க்கால்களை வளரச் செய்யும்.
கற்றாழையின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பால் கலந்து முடிகளின் ஸ்கால்ப்பில் தடவுங்கள். பிறகு நுனி வரை தடவவும்.
இவை உடல் முழுவதும் ஒழுகாமல் இருக்க தலையை ஷவர் கேப் கொண்டு மூடிடுங்கள். அரை மணி நேரம் கழித்து நல்ல தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு கூந்தல் அலசுங்கள். அந்த வாரம் முழுவதும் கூந்தம் மிருதுவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications















