Latest Updates
-
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
ஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா? அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்!
இங்கு அசிங்கமாக மேலே ஏறி இருக்கும் ஈறுகளை மீண்டும் பழைய நிலைக்கு அழகாக மாற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பற்களை சூழ்ந்துள்ள மென்மையான திசுக்களால் ஆனது தான் ஈறுகள். இந்த ஈறுகள் மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தாலும், பற்காறைகளின் உருவாக்கத்தாலும், புகைப்பிடித்தல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றாலும் மேலே ஏறி அசிங்கமான தோற்றத்தைத் தரும்.

ஈறுகள் மேலே ஏறிவிட்டால், பற்கள் மிகவும் பெரியதாக காட்சியளிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே ஈறுகளின் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. அதற்கு தினமும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை அன்றாடம் பின்பற்ற வேண்டும்.
இங்கு அசிங்கமாக மேலே ஏறி இருக்கும் ஈறுகளை மீண்டும் பழைய நிலைக்கு அழகாக மாற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரீன் டீ
தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாய்க்கு ஒரு நல்ல பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, ஈறுகளை நோய்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

கற்றாழை
தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின், சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலமும் ஈறுகளைத் தாக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங்கும் ஈறு பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதற்கு தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ஈறுகள் வளர்ச்சி அடைவதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெயில் உள்ள மருத்துவ குணம், வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு தினமும் பற்களைத் துலக்கும் போது, 2 துளிகள் கிராம்பு எண்ணெயை பற்பசையுடன் சேர்த்து துலக்குங்கள்.

எலுமிச்சை
1 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1/4 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, 1 வாரம் கழித்து, அந்த கலவையால் வாரத்திற்கு 2-3 முறை பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்து கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications











