Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஈறுகள் மேலே ஏறி அசிங்கமாக உள்ளதா? அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்!
இங்கு அசிங்கமாக மேலே ஏறி இருக்கும் ஈறுகளை மீண்டும் பழைய நிலைக்கு அழகாக மாற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பற்களை சூழ்ந்துள்ள மென்மையான திசுக்களால் ஆனது தான் ஈறுகள். இந்த ஈறுகள் மோசமான வாய் பராமரிப்பின் காரணமாக வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தாலும், பற்காறைகளின் உருவாக்கத்தாலும், புகைப்பிடித்தல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றாலும் மேலே ஏறி அசிங்கமான தோற்றத்தைத் தரும்.

ஈறுகள் மேலே ஏறிவிட்டால், பற்கள் மிகவும் பெரியதாக காட்சியளிக்க ஆரம்பித்துவிடும். ஆகவே ஈறுகளின் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. அதற்கு தினமும் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களை அன்றாடம் பின்பற்ற வேண்டும்.
இங்கு அசிங்கமாக மேலே ஏறி இருக்கும் ஈறுகளை மீண்டும் பழைய நிலைக்கு அழகாக மாற்ற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரீன் டீ
தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாய்க்கு ஒரு நல்ல பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, ஈறுகளை நோய்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

கற்றாழை
தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின், சிறிது கற்றாழை ஜெல்லை வாயில் போட்டு, 5 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலமும் ஈறுகளைத் தாக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறைந்து, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங்கும் ஈறு பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதற்கு தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ஈறுகள் வளர்ச்சி அடைவதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெயில் உள்ள மருத்துவ குணம், வாயில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். அதற்கு தினமும் பற்களைத் துலக்கும் போது, 2 துளிகள் கிராம்பு எண்ணெயை பற்பசையுடன் சேர்த்து துலக்குங்கள்.

எலுமிச்சை
1 எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1/4 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, 1 வாரம் கழித்து, அந்த கலவையால் வாரத்திற்கு 2-3 முறை பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்து கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications