Just In
- 8 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 9 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 11 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- 12 hrs ago
செட்டிநாடு தேங்காய் குழம்பு
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்கள் உறவு மகிழ்ச்சியாக அமைய உங்கள் துணையுடன் நீங்க இத செய்யுங்க போதும்…!
தகவல்தொடர்பு என்பது மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், ஒரு உறவில் ஆணும், பெண்ணும் தொடர்பு கொள்வது என்பது அதைவிட மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இதன் அவசியத்தை யாரும் புரிந்துகொள்வதில்லை. நீங்களும் அவ்வாறு இருந்தால், நீங்கள் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆரோக்கியமான தொடர்பு என்பது ஒவ்வொரு உறவிற்கும் அடித்தளம். உங்கள் எண்ணங்களை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பது எல்லாவற்றையும் வேறுபடுத்துகிறது.
நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பாக தொடர்பு கொள்ளும்போது, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான உறவு வலுவடையும். ஆனால் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு, நீங்கள் கவனமாகக் கேட்டு செயலாக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதன் மூலம் உங்கள் துணையுடன் நீங்கள் நெருங்கமாக உதவும் சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

தேவைகளை பேசாமல் இருப்பது
மிகவும் தோல்வியுற்ற பல உறவுகளுக்கும் பின்னால் தவறான தகவல்தொடர்பு இருக்கிறது என்பது நிதர்சனம். ஒரு உறவில் உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இல்லாமல் இருப்பது மந்தமான காதல் வாழ்க்கையின் அடையாளம். சில நேரங்களில் நிறைவேறாத ஆசைகள் அல்லது தேவைகள் ஒரு உறவுக்கு ஈடுசெய்ய முடியாத அழிவை ஏற்படுத்தும். இது அந்த உறவு பிரிவதற்கும் வழிவகுக்கும்.
MOST READ:உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா?

வெளிப்படையாக இருங்கள்
கூட்டாளிகள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் எதிர்பார்ப்புகளையும் உறவையும் அறிந்திருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்களும் உங்கள் துணையும் மனம் விட்டுப் பேச வேண்டும். இருவரும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சில பொருத்தமற்ற வாதங்களையும், செயல்களையும் இருவரும் உண்மையில் தவிர்க்கலாம்.

மனதைப் படிக்க முடியாது
"ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்" என்ற வசனம் திரைப்படங்களிலும், வாழ்க்கையில் அதிக பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது நிதர்சனம் இல்லை. யார் மனதில் உள்ளதையும் இங்கு யாராலும் படிக்க முடியாது என்பதே உண்மை. உங்கள் துணை ஒரு மந்திரவாதி அல்ல உங்கள் மனதைப் படிப்பதற்கு?

ஆரோக்கியமான வழி அல்ல
சில நேரங்களில், கோபம், அதிருப்தி அல்லது மகிழ்ச்சி போன்ற ஆழ்ந்த உணர்ச்சிகளை உங்கள் முகபாவனைகள் வெளிப்படுத்தும். ஆனால் உங்கள் துணை சொற்களை விட உங்கள் வெளிப்பாடுகளின் அடிப்படையில் உங்கள் மனதைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தொடர்புகொள்வதற்கான ஆரோக்கியமான வழி அல்ல. இருவரும் மனதில் உ���்ள விஷயங்களை பகிர்ந்துகொள்ளும்போதுதான் ஒருவரை பற்றி மற்றொருவர் தெரிந்துகொள்ள முடியும்.
MOST READ:உங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

கேட்டு பின்னர் விவாதிக்கவும்
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு சிறை மனக்கசப்பு ஏற்படுகிறது என்றால், அதை பேசி தீர்க்க வேண்டும். அந்த சமயத்தில் உங்கள் துணையின் புறம் உள்ள வாதத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். தாங்கள் நினைப்பது மற்றும் செய்வது மட்டுமே சரி என்று எண்ணக்கூடாது. உங்கள் தரப்பு வாதத்தையும் உங்கள் துணை கேட்க வேண்டும். நீயா?, நானா? என்று சண்டை போட்டுக்கொள்ளாமல், நீயா?, நானா? நிகழ்ச்சியை போல இருபுறமும் வாதங்களை கேட்க வேண்டும்.

சமமாக இருக்க வேண்டும்
உறவு வாழ்க்கை என்பது இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். விவாதங்களின் போதும் ஒவ்வொரு நபருக்கும் சமமான கருத்து இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை என்று நீங்கள் நினைத்தால், இதை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஆரோக்கியமான உறவுக்கு, தொடர்புகொள்வது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மோதலை தீர்க்க வேண்டும்
காதல் மற்றும் உறவில் சண்டைகள் வருவது சகஜம்தான் என்றாலும், அது எவ்வாறு சரிசெய்யப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது ஆரோக்கியமான உறவு. உடல் ரீதியான மோதல்களைத் தவிர்க்க வேண்டியதில் எந்த மாற்றம் இல்லை. வாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் எல்லா உறவின் வழக்கமான பகுதியாகும். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால், ஒரு நபர் இந்த மோதல்களை எவ்வாறு தீர்க்கிறார் என்பதுதான்.
MOST READ:‘அந்த ' நேரத்தில் ஆண்கள் செய்யுற இந்த விஷயங்கள் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காதாம்...!

தவறான புரிதல்
தவறான புரிதல்கள் சண்டைகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், சண்டைகள் தீர்க்கப்படாமல் இருக்கும்போது எதிர்காலத்தில் அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் துணையுடன் உட்கார்ந்து சண்டையைத் தீர்ப்பது நல்லது. இது மறுநாள் காலையில் சிறந்த தகவல்தொடர்புக்கு மென்மையான பாதையை உருவாக்க உதவும்.

நேரம் செலவிட வேண்டும்
பரபரப்பான இக்காலகட்டத்தில் அலுவலக வேலை, பயணம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற நூறு செயல்பாடுகளுக்கு மத்தியில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் செலவழிக்க அதிக நேரம் ஒதுக்கவில்லை. வீட்டை விட தங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவோரில் நீங்கள் ஒருவராக இருந்தால், அதை மாற்ற நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். செல்போனில் மணிக்கணக்காகப் பேசுவதைக் காட்டிலும், இருவரும் நேரில் அமர்ந்து பேசிக்கொள்வது போன்று சிறந்ததாக இருக்க முடியாது. எனவே தம்பதிகள் இருவரும் சேர்ந்து செலவிட நேரம் ஒதுக்குங்கள்.

மகிழ்ச்சியாக வாழுங்கள்
ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததுதான் என்றாலும், அந்த உறவை நாம் எப்படி அமைத்துக்கொள்கிறோம், அதில் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்தே, மகிழ்ச்சியும், கவலையும் ஏற்படுகிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக உறவில் வெளிப்படையாக இருப்பது, மனம் விட்டுப் பேசுவது என்பது என்பது மிக முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும்போது வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும்.