Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஆண்களே! உங்க திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடியாமல் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணுங்க போதும்...!
ஒரு திருமண உறவை வெற்றிகரமானதாக பராமரிக்க ஆண், பெண் இருவருமே தங்களால் முடிந்த முயற்சியை செய்ய வேண்டும்.
ஒரு திருமண உறவை வெற்றிகரமானதாக பராமரிக்க ஆண், பெண் இருவருமே தங்களால் முடிந்த முயற்சியை செய்ய வேண்டும். திருமணமானது பல சமரசங்கள், நிறைய புரிதல் மற்றும் தகவல் தொடர்பு, மற்றும் நிறைய பேரார்வம் மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஒரு திருமணம் விவகாரத்தில் முடிவதற்கு எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். தம்பதிகள் இருவருமே தங்களால் முடிந்தவரை விவகாரத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழ சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை செய்யக்கூடாது. இந்த பதிவில் ஆண்கள் விவகாரத்தை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மனைவியை வசீகரிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்
திருமணம் ஆகிவிட்டதே என்று உங்கள் மனைவியை ஒருபோதும் வசீகரிப்பதை நிறுத்தாதீர்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்காதீர்கள். அவர்கள் உங்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்தவர்கள், நீங்கள் அவர்களின் மகிழ்ச்சியை உங்கள் இலட்சியமாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்களின் இதயத்தை பாதுக்கப்பதாக வாக்களித்தவர்கள். எனவே ஒருபோதும் அதனை உடைத்து விடாதீர்கள். அவர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருங்கள்.

அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள்
திருமணத்திற்குப் பிறகு மனைவியை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றும் பழக்கம் பலருக்கு உள்ளது, இது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்கள் மாறினால், நீங்கள் அவளை காதலிக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் முதலில் காதலித்த பெண் அவர் இல்லை. நீங்கள் அவர்களை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், அவர்கள் அதை விரைவில் அறிந்து கொள்வார்கள், அது அவர்களை விரக்தி அடையச்செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள்
அவர்கள் சோகமாகவோ அல்லது வருத்தமாகவோ இருக்கும்போது, அவர்களைச் சரிசெய்வது உங்கள் வேலை அல்ல, அவர்களை அணைத்து எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லுங்கள். அவர்களைச் சுற்றி இருக்க அவர்கள் சொல்வதைக் கேட்க அங்கேயே இருங்கள். அவருக்கு ஆதரவாக இருங்கள், ஆலோசகராக அல்ல. சில சமயங்களில் அவர்களின் புலம்பல்களை கேட்பது மட்டுமே போதுமானது. மேலும், அவர் வருத்தப்படும்போது ஓடிவிடாதீர்கள். சில ஆண்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் மோசமாக இருப்பார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது, அருகில் இருப்பது, அவருக்கு டீ அல்லது காபி அல்லது அவருக்குப் பிடித்தமானவற்றை எடுத்துச் செல்வதுதான்.

உங்கள் சொந்த உணர்ச்சிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்
உங்களை மகிழ்விப்பதும், நீ கேட்கும் போது கைதட்டும் குரங்காக இருப்பதும் மட்டுமே உங்கள் மனைவியின் வேலையல்ல. உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளை நீங்களே கண்டறியுங்கள்.

பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்
பெரும்பாலான விவாகரத்து பெற்ற ஆண்கள் பணம் முக்கியம் என்று உங்களுக்குச் சொல்வார்கள், ஆனால் உங்கள் மனைவியுடன் சிக்கனமாகவும் மலிவாகவும் இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது பாராட்டப்படாது. அது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கும். சேமிப்பை வைத்திருங்கள், அதைத் தொட வேண்டாம், ஆனால் சேமிக்க வேண்டிய இடத்தில் சேமித்து, செலவழிக்க வேண்டிய இடத்தில் செலவிடுங்கள். அதுதான் சீரான திருமண வாழ்க்கைக்கு அடிப்படையானது.



Click it and Unblock the Notifications