Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கணவனின் பார்ன் அடிக்ட், இல்வாழ்க்கையை பாதிக்கிறது : நீதிமன்ற படி ஏறிய கலியுக கண்ணகி!
கணவனின் பார்ன் அடிக்ஷன் இல்வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே, பார்ன் தளங்களை தடை செய்ய நீதி மன்றம் நாடியுள்ளார் ஒரு மும்பை பெண்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் பார்ன்-க்கு அடிமையாகி இருப்பதாகவும். அதனால் தங்கள் இல்லற வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாகிறது. எனவே, பார்ன்-க்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட்!
மும்பையை சேர்ந்த பெண் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் படியேறி உள்ளார். ஆன்லைன் பார்ன் காரணத்தால் இல்லறம் பாதிக்கப்படுகிறது என அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

படித்த நபரே இப்படியா?
தனது கணவர் நன்கு படித்தவர். அவரே பார்ன் விஷயத்தில் இப்படி இருக்கிறார். இதனால் எங்கள் வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இது இளைஞர்கள் வாழ்க்கையில் இன்னமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நேரம் விரயம் ஆகிறது!
தனது கணவர் அதிக நேரத்தை பார்ன் பார்க்க செலவிடுகிறார். அதிலும் இன்று இன்டர்நெட் மிகவும் எளிமையாக கையாள முடிவதால் பார்ன் வேகமாக பரவுகிறது. இதனால் தனது கணவர் வக்கிரமாக மாறி வருவதாகவும். இதனால் இல்வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்றும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர்!
இம்மனுவை முன்வைத்தவர் ஒரு சமூக ஆர்வலர். இவருடைய முப்பது வருட இல்வாழ்க்கையில் இப்போது பார்ன் மிக பெரிய இடைஞ்சலாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் இப்படி மாறியிருப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய தடை!
ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் குழந்தைகள பார்ன் கன்டன்ட் இருக்கும் இணையதளங்களை முழுமையாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications