Just In
- 2 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 4 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 5 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 7 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவனின் பார்ன் அடிக்ட், இல்வாழ்க்கையை பாதிக்கிறது : நீதிமன்ற படி ஏறிய கலியுக கண்ணகி!
கணவனின் பார்ன் அடிக்ஷன் இல்வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே, பார்ன் தளங்களை தடை செய்ய நீதி மன்றம் நாடியுள்ளார் ஒரு மும்பை பெண்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் பார்ன்-க்கு அடிமையாகி இருப்பதாகவும். அதனால் தங்கள் இல்லற வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாகிறது. எனவே, பார்ன்-க்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சுப்ரீம்கோர்ட்!
மும்பையை சேர்ந்த பெண் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் படியேறி உள்ளார். ஆன்லைன் பார்ன் காரணத்தால் இல்லறம் பாதிக்கப்படுகிறது என அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
படித்த நபரே இப்படியா?
தனது கணவர் நன்கு படித்தவர். அவரே பார்ன் விஷயத்தில் இப்படி இருக்கிறார். இதனால் எங்கள் வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இது இளைஞர்கள் வாழ்க்கையில் இன்னமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேரம் விரயம் ஆகிறது!
தனது கணவர் அதிக நேரத்தை பார்ன் பார்க்க செலவிடுகிறார். அதிலும் இன்று இன்டர்நெட் மிகவும் எளிமையாக கையாள முடிவதால் பார்ன் வேகமாக பரவுகிறது. இதனால் தனது கணவர் வக்கிரமாக மாறி வருவதாகவும். இதனால் இல்வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்றும் அவர் மனுவில் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர்!
இம்மனுவை முன்வைத்தவர் ஒரு சமூக ஆர்வலர். இவருடைய முப்பது வருட இல்வாழ்க்கையில் இப்போது பார்ன் மிக பெரிய இடைஞ்சலாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் இப்படி மாறியிருப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய தடை!
ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் குழந்தைகள பார்ன் கன்டன்ட் இருக்கும் இணையதளங்களை முழுமையாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.