Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?
அன்பு, அக்கறை, கண்டிப்பு, கோபம் என முதல் குழந்தை பிறந்த பிறகு மனைவியிடம் மாறுபடும் குணாதிசயங்கள்.
அம்மா! இந்த சொல் தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு மனிதியாக பெண் முழுவதும் கற்றுக் கொள்ளவும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்கும் அம்மா என்ற ஸ்தானம் தான் காரணம்.

தாய்மை அடைந்த பெண்கள், முக்கியமாக, முதல் குழந்தை பெற்றவுடன், இல்லறம் சார்ந்த விஷயங்களில் அவர்களிடம் பல மாற்றங்கள் காண முடியும். அவை என்னென்ன, எதனால் அவர்களிடம் இந்த மாற்றங்கள் தென்படுகின்றன என இனி காண்போம்....

மாற்றம் #1
குழந்தை வளர்ப்பு, ஊடச்சத்து மிகுந்த உணவுகள், எப்படி தாலாட்ட வேண்டும், என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என அதிக பொறுப்புகளுடன் காணப்படுவார்கள்.

மாற்றம் #2
யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரியளவில் கோபம் வரும். முக்கியமாக குழந்தை சார்ந்த விஷயத்தில். தவறாக தூக்கிவிட்டால் கூட, யார் எவர் என பார்க்காமல் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

மாற்றம் #3
குழந்தையை தூங்க வைக்க வேண்டும், அழும் போது தாலாட்ட வேண்டும், சரியாக உணவூட்ட வேண்டும். இதற்கெல்லாம் மேல், வீட்டு வேலைகளும் செய்ய வேண்டும். வீட்டு வேலைகள் அதிகமாக இருப்பதாலேயே அதிக கோபம் அடிக்கடி வரும். கணவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மாற்றம் #4
குளித்துவிட்டு தான் குழந்தையை தூக்க வேண்டும், இறைச்சி உண்டால், பல் துலக்கிவிட்டு தான் குழந்தையை தொட வேண்டும், முத்தமிட வேண்டும், வண்டி ஓட்டிவிட்டு வந்தால் கூட கை கழுவிய பிறகு தான் குழந்தை அருகே செல்ல வேண்டும் என பல கண்டிப்புகள் இருக்கும்.

மாற்றம் #5
கணவன் அதிகமாக குழந்தை மீது மட்டுமே பாசமாக, அக்கறையாக இருந்தாலும், அவர் ஏன் தன் மீது அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை என சங்கட படுவார்கள்.

கருத்து!
இதற்கெல்லாம் காரணம் குழந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் தான். இதன் வெளிப்பாடாக தான் இந்த சின்ன, சின்ன மாற்றங்கள் அதிகளவில் பெண்களிடம் முதல் குழந்தை பிறந்த பிறகு வெளிப்படுகின்றன.



Click it and Unblock the Notifications