Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?
அன்பு, அக்கறை, கண்டிப்பு, கோபம் என முதல் குழந்தை பிறந்த பிறகு மனைவியிடம் மாறுபடும் குணாதிசயங்கள்.
அம்மா! இந்த சொல் தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு மனிதியாக பெண் முழுவதும் கற்றுக் கொள்ளவும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்கும் அம்மா என்ற ஸ்தானம் தான் காரணம்.

தாய்மை அடைந்த பெண்கள், முக்கியமாக, முதல் குழந்தை பெற்றவுடன், இல்லறம் சார்ந்த விஷயங்களில் அவர்களிடம் பல மாற்றங்கள் காண முடியும். அவை என்னென்ன, எதனால் அவர்களிடம் இந்த மாற்றங்கள் தென்படுகின்றன என இனி காண்போம்....

மாற்றம் #1
குழந்தை வளர்ப்பு, ஊடச்சத்து மிகுந்த உணவுகள், எப்படி தாலாட்ட வேண்டும், என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என அதிக பொறுப்புகளுடன் காணப்படுவார்கள்.

மாற்றம் #2
யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரியளவில் கோபம் வரும். முக்கியமாக குழந்தை சார்ந்த விஷயத்தில். தவறாக தூக்கிவிட்டால் கூட, யார் எவர் என பார்க்காமல் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

மாற்றம் #3
குழந்தையை தூங்க வைக்க வேண்டும், அழும் போது தாலாட்ட வேண்டும், சரியாக உணவூட்ட வேண்டும். இதற்கெல்லாம் மேல், வீட்டு வேலைகளும் செய்ய வேண்டும். வீட்டு வேலைகள் அதிகமாக இருப்பதாலேயே அதிக கோபம் அடிக்கடி வரும். கணவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மாற்றம் #4
குளித்துவிட்டு தான் குழந்தையை தூக்க வேண்டும், இறைச்சி உண்டால், பல் துலக்கிவிட்டு தான் குழந்தையை தொட வேண்டும், முத்தமிட வேண்டும், வண்டி ஓட்டிவிட்டு வந்தால் கூட கை கழுவிய பிறகு தான் குழந்தை அருகே செல்ல வேண்டும் என பல கண்டிப்புகள் இருக்கும்.

மாற்றம் #5
கணவன் அதிகமாக குழந்தை மீது மட்டுமே பாசமாக, அக்கறையாக இருந்தாலும், அவர் ஏன் தன் மீது அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை என சங்கட படுவார்கள்.

கருத்து!
இதற்கெல்லாம் காரணம் குழந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் தான். இதன் வெளிப்பாடாக தான் இந்த சின்ன, சின்ன மாற்றங்கள் அதிகளவில் பெண்களிடம் முதல் குழந்தை பிறந்த பிறகு வெளிப்படுகின்றன.



Click it and Unblock the Notifications