Latest Updates
-
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
உங்கள் உறவில் இந்த நாலு அறிகுறிகள் தென்படுகிறதா?
இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனையை போல. அதற்கும் அன்பெனும் நல்ல அஸ்திவாரம், உறவுகள் எனும் தூண்கள், பெற்றோர், பிள்ளைகள் எனும் மேற்கூரை இருந்தால் தான் அது உணமையான வீடு. இல்லையேல் அது வெறும் பொட்டல் காடு. மேலும், உங்கள் வீட்டை உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் தான் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
அன்பு செலுத்துதல், அக்கறை எடுத்துக் கொள்ளுதல், ஒருவரை ஊக்குவிப்பது, அவரவருக்கான சுதந்திரத்தை பறிக்காமல் இருப்பது போன்றவை தான் உறவை சிறக்க வைக்கும் பண்புகள். உறவு சிறக்க வேண்டுமெனில் பாராட்டுதல் மிக முக்கியம். கணவன், மனைவிக்கு இடையில் நன்றி தான் கூறிக் கொள்ள கூடாதே தவிர பாராட்டிக் கொள்ளலாம்.

பண்புகளை மதித்தல்
ஒரே போன்று குணாதிசயங்கள், பண்புகள் கொண்டுள்ளவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கலாம். ஆனால், சிறந்த கணவன், மனைவியாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

பண்புகளை மதித்தல்
வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டுள்ளவர்கள் மத்தியில் தான் காதல் ஈர்ப்பு ஏற்படும். எ-கா., காந்தங்களை போன்றது தான் தாம்பத்திய, இல்லற உறவு. எனவே, நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் அதை மதிக்கவும், பாராட்ட செய்தாலே உங்கள் உறவு என்றும் சிறந்து விளங்கும்.

நம்பகமும், சுதந்திரமும்
நம்பிக்கை தான் அனைத்து உறவுகளின் வேர். இது சிதைந்துவிட்டால் உறவின் வலிமை சீர்குலைத்துவிடும். எனவே, ஒருவர் மீதான நம்பிக்கையை எக்காரணம் கொண்டும் சந்தேகப்படாமல் இருக்கும் வரை உங்கள் உறவு சிறந்து விளங்கும்.

நம்பகமும், சுதந்திரமும்
அதே போல சுதந்திரத்தை பறிக்க கூடாது. ஒருவேளை உங்கள் துணை நீண்ட நாள் தோழர்/தோழியை கண்டதால் உங்களிடம் சொல்லாமல் கூட நேர தாமாதமாக வந்திருக்கலாம். வீட்டிற்கு வந்து கூட உங்களிடம் சொல்லலாம் என நினைத்திருக்கலாம். இவற்றை எல்லாம் பெரிதுப் படுத்தாமல் இருக்கும் உறவுகள் என்றும் சிறந்து விளங்கும்.

சமநிலை
ஆண் பெண், கணவன் மனைவி என்ற பிரிவினை பாராமல். ஏற்ற தாழ்வு இன்றி. குடும்ப பொறுப்புகளில் இருந்து, மரியாதை அளித்தல், சமூகத்தில் பங்கெடுத்துக் கொள்ளதல் என அனைத்திலும் சமநிலை வளரும் உறவு என்றும் சிறந்து விளங்கும்.

மகிழ்விப்பது
உங்கள் துணை தோல்வி அல்லது சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அதைப் போக்க நீங்கள் முயற்சிப்பவராக இருந்தால் உங்கள் உறவில் என்றுமே தொய்வு ஏற்படாது. எந்நாளும் உறவில் இறுக்கமும், பாசமும் அதிகரித்துக் கொண்டு தான் போகும்.

முடிவு
இல்வாழ்க்கை என்பது நாமாக அமைத்துக் கொள்ளும் உறவு. அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும், எனில், அதற்காக நாம் தான் எதையேனும் முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் நமது சந்தோசத்தைகட்டுப்படுத்தி அதிபதியாக இருந்தால் நாம் அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications